Monday, March 30, 2020

வழிகாட்டியாய் இரு துருவ நட்சத்திரங்கள்...★★

*🚩🚩வழிகாட்டியாய் 
இரு துருவ நட்சத்திரங்கள்...★★*
          
 *-க.வி.ஸ்ரீபத்*
     1981 மார்ச் 31 மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஒரு அசாதாரணமான பதற்றம் நிலவியது. மாணவர் சங்க தலைவர்கள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் என்ற செய்தி கண்ணகி வைத்த தீயை போல மதுரை மாநகர் முழுவதும் பரவி ஆவேசக் அனலை மூட்டியது. வெட்டி வீழ்த்தப்பட்ட அந்த இரண்டு மாவீரர்களின் பெயர்கள் சோமசுந்தரம் -செம்புலிங்கம். யார் இந்த மாணவர்கள்? எதற்காக நிகழ்ந்தது இந்த படுகொலை?

         தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகிலுள்ள துரைசாமியாபுரம் என்ற கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சோமசுந்தரம். அதே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போல்டன்புரத்தில் மாரிமுத்து என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் செம்புலிங்கம். இருவருமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள். தங்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பல தலைமுறைகளின் கனவுகளை சுமந்து கொண்டு ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட தங்கள் சமூகத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகளாக மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தனர். ஆனால் கல்லூரிக்குள் இருந்த சூழல் இவர்களது கனவுகளை கானல்நீராக போகும்படி செய்து கொண்டிருந்தது. பிறந்தது முதல் தாங்கள் வசித்த பகுதியில் என்னென்ன சாதிய ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்து வந்தார்களோ, அதே ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் அவர்கள் கல்லூரிக்குள்ளும் சந்திக்க நேர்ந்தது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சக மாணவர்களோடு இயல்பாக பேசி பழக முடியாது. குடிநீர் குழாயை தொட்டு அதில் நீர் அருந்த முடியாது என்றெல்லாம் சொல்லொணாக் கொடுமைகளை அந்த மாணவர்கள் அனுபவித்து வந்தனர். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகவும், கல்லூரியில் மாணவர்கள் பெரும் பிரச்சனையாக இருந்த ராகிங் கொடுமைக்கு எதிராகவும் களம் கண்டது இந்திய மாணவர் சங்கம்.

         இந்திய மாணவர் சங்கத்தின் செயல்பாடுகளாலும் போராட்டங்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்ட சோமசுந்தரமும் செம்புலிங்கம் எஸ்.எப்.ஐ யில் தங்களை இணைத்துக் கொண்டனர் அதுவரை சோமசுந்தரம் செம்புலிங்கம் என்று அறியப்பட்டவர்கள் அனைத்து மாணவ தோழர்களாலும் சோமு-செம்பு என பாசத்தோடு அழைக்கப்பட்டனர்.

          வெகுவிரைவில் எஸ்.எப்.ஐ தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கிளைச் செயலாளராக தோழர் சோமு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், உயர்த்தப்பட்ட உணவு கட்டணத்தை குறைப்பதற்காகவும், கல்லூரி நிர்வாகத்தின் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் என இந்திய மாணவர் சங்கம் தலைமையில்  வெண்பதாகையின் கீழ் சாதிய வேறுபாடுகளைக் கடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அணிதிரண்டு வீரியமிக்க போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டனர். அதன் தொடர்ச்சியாக 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் எஸ்.எப்.ஐ தலைமையில் உருவான 'அன்பு அணி' மகத்தான வெற்றி பெற்றது மாணவர் பேரவையின் தலைவராக ரவீந்திரனும் செயலாளராக செம்புலிங்கமும் தேர்வு செய்யப்பட்டனர்.

          இந்திய மாணவர் சங்கத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளும் அதற்கு மாணவர்கள் மத்தியில் இருந்த ஆதரவும் தங்கள் அதிகார கோட்டையை தகர்ப்பதற்கான சம்மட்டி அடிகளாக விழுவதை ஆதிக்க சக்திகள் உணர துவங்கினர். மாணவர்களின் பிரச்சனைகளுக்காகவும், ஜனநாயக  உரிமைகளுக்காகவும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த எஸ்.எப்.ஐ-க்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் மோதல்கள் ஏற்படத்தொடங்கின.

          இதற்கிடையில் கல்லூரி தேர்வு விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த கிராமமான துரைசாமியாபுரத்திற்கு சென்ற சோமு அக்கிராமத்தின் அடிப்படை பிரச்சினைகளை  தீர்ப்பதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை துவக்கி அவர்களின்  முதல் கோரிக்கையாக  கிராமத்திற்கு தார் சாலை அமைக்க கோரி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

          இந்திய மாணவர் சங்கத்தின் இத்தகைய செயல்பாடுகளை இனியும் விட்டு வைத்தால், தங்கள் ஆதிக்க கோட்டை அடியோடு சரிந்து விடும் என்பதை உணர்ந்து எஸ்.எப்.ஐ யின்  செயல்பாடுகளை தடுக்க நினைத்த அவர்கள், யாரைத் தாக்கினால் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கும், போராட்டங்கள் ஒடுங்கும் என்று நினைத்தார்களோ அந்த தோழர்களை அவ்வப்போது தாக்க துவங்கினர். இத்தகைய தாக்குதல்களின் நீட்சியாகத்தான் 1981ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இரவு அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தேறியது.

          அன்று இரவு அடியாட்களுடன் விடுதிக்குள் நுழைந்த ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மாணவர்களை தாக்கி அவர்களின் அறைகளை சூறையாடி தோழர் செம்புலிங்கத்தை வெட்டி வீழ்த்தினர். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு திரையரங்கத்தில் இருந்து வரும் தோழர் சோமு கத்தியால் குத்தப்பட்டு உயிரிழக்கிறார்.

          மறுநாள் ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் ஆவேச அலையில் கொதித்து எழுந்தது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்ற இறுதி ஊர்வலத்தோடு, பின்னாளில் எழப்போகும் மகத்தான புரட்சியின் வீரிய வித்துக்களாக தோழர்கள் சோமுவும் செம்புவும் விதைக்கப்பட்டனர்.

          எஸ்.எப்.ஐ-யை அழிப்பதாக நினைத்து யாரை வெட்டி வீழ்த்தினார்களோ, அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதையும், என்றும் வாழ்வார்கள் என்பதையும் அந்த முட்டாள்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்திய மாணவர் சங்கத்தின் ஒவ்வொரு தோழரும் சோமு -செம்புவின் நினைவையும் இலட்சியத்தையும் நெஞ்சில் சுமந்து, அவர்கள் உயர்த்திப்பிடித்த “சுதந்திரம்-ஜனநாயகம்-சோசலிசம்” என்கின்ற லட்சிய பதாகையை உயர்த்திப் பிடித்து, சாதிய, மதவாதத்திற்கு எதிராகவும், கல்வி நிலைய ஜனநாயக உரிமைகளுக்காகவும், தொடர்ந்து  களமாடி வருகின்றனர்.

          அன்று சோமுவையும் செம்புவையும் கொன்ற சாதி ஆதிக்க வெறி இன்று நீட் தேர்வு வடிவத்தில் அனிதாவை கொன்றது. அன்று தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நிலவிய சாதிய பாகுபாடுகள்  தேசத்தின் தலை சிறந்த  கல்வி நிலையம் என்று அறியப்படக்கூடிய சென்னை ஐ.ஐ.டி-யில்  இன்றும் நீடிக்கிறது. ஆக, சோமுவும் செம்புவும் முன்னெடுத்த போராட்டத்தை முன்பைவிட வலுவாக இன்று முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

          சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்திய தேசத்தின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி, நாட்டை துண்டாட துடிக்கும் பாசிச பிஜேபி ஆட்சியை விரட்டியடித்திட, மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை உருவாக்கிட, இந்திய நாட்டின் பொதுக் கல்வியை பாதுகாத்திட, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்திட எஸ்.எப்.ஐ தொடர்ந்து நடத்தும் போராட்டங்களுக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரங்களாக தோழர்கள் சோமுவும் செம்புவும் இன்றும் என்றும் திகழ்வார்கள். அவர்கள் தரும் வெளிச்சத்தைக் கொண்டு சாதி மத இருளகற்றி இந்திய தேசத்தை பாதுகாத்திட உறுதியேற்போம்...

*(மார்ச் 31, 2020 தோழர்கள் சோமு-செம்பு வின் 39-ம் ஆண்டு நினைவு தினம்)*

#SFI #SFI50 #SOMU #SEMPU

எங்கள் அன்புக்குரிய சீன சப்ப மூக்கனுங்க💓💓💓

எங்கள் அன்புக்குரிய சீன சப்ப மூக்கனுங்க💓💓💓

இந்தியாவுக்கும் உதவிப் பொருட்களை அனுப்பி வச்சிருக்காங்க...

17 லட்சம் மாஸ்க்குகள்  1.5 லட்சம் பரிசோதனைப் பெட்டகங்கள், பரிசோதனைக் கருவிகள், மருத்துவ பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள், வென்டிலேட்டர்கள்  ஆகியவற்றை, உலகப் புகழ் பெற்ற #அலிபாபா என்னும் சீன  நிறுவனம் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது...

இந்த பொருள்கள் யாவும் #இந்திய_செஞ்சிலுவைச்_சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது...

இதோடு அலிபாபா நிறுவனம் அமெரிக்கா உட்பட ஏராளமான நாடுகளுக்கு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது...!

https://www.manoramanews.com/news/india/2020/03/29/jack-ma-donates-17-lakh-masks-165-lakh-test-kits-and-medical-gear-to-india.html

#Alibaba
#Fight_Together

#Break_The_Chain

ஒரு முறை கண்திறந்து பாருங்கள் பாரத பிரதமரே

ஒரு முறை கண்திறந்து பாருங்கள் பாரத பிரதமரே இவர்கள் செய்த தவறென்ன. கொரோணா வைரஸை ஒழிக்க இவர்கள் கைகளையும் தட்டுவார்கள், மணியும் அடிப்பார்கள். தங்கள் சொந்த காசை வங்கியில் எடுக்க முடியாமல் கால்கடுக்க நின்று அந்த வங்கியின் அருகிலேயே மாண்டும் கிடப்பார்கள். 

கழிவறையின் கனநேரச் சிந்தனையில் உதிக்கும் உங்களின் பல யோசனைகளுக்கு உங்களை சுற்றியுள்ள பின்னணி இசைஞர்கள் போல அரசியல் மரமண்டைகள் ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் சொல்லலாம். 

நீங்களும் வருத்த முந்திரியும் திராட்சையும் சாப்பிட்டுவிட்டு இரவு எட்டு மணிக்கு உங்கள் யோசனையை அறிவித்து நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அமல்படுத்தலாம். ஆனால்

இவர்களை பற்றி ஒரு சில விநாடிகளாவது சிந்தியுங்கள். இராமாயணம் பார்த்து பொழுதை கழிக்க இவர்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் எம்பிக்கள் அல்ல. 

பசியுடன் இரத்தம் வழியும் கால்களுடன் 1000 கி.மீகளை நடந்தே கடக்கும் இவர்களுக்கா ஒரு சிறு அவகாசம் வழங்கியிருக்கலாமே உயர்திரு 56 இஞ்ச் மோடி அவர்களே.

Tuesday, March 24, 2020

இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களே கொஞ்சம் கவனியுங்கள்.

இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களே கொஞ்சம் கவனியுங்கள். 

இன்றைய விலை நிலவரம் 
(திருப்பூர், தோட்டத்து பாளையம்)

வெங்காயம் கிலோ - 100
கத்தரிக்கா கிலோ- 120
உருளைக்கிழங்கு கிலோ - 55
முள்ளங்கி கிலோ- 60
கேரட் பீன்ஸ் கொலோ- 100
மாங்காய் கிலோ - 80
முருங்கைக்காய் ஒன்று - 10
.........etc

வேலைக்கு போகாமல் வீட்டிலிருந்தால் எப்படி வாங்குவது இந்த விலை உயர்ந்த பொருட்களை. வேலையுமில்லை கையில் காசுமில்லை. ரேசன் அரிசியில் சாதம் வடித்தாலும் எவ்வளவு நாள் குழம்பு வைத்து சாப்பிட முடியும் தெரியல. கேஸ் அடுப்பு தீறப்போகிறது கேஸ் வந்தாலும் 900 ரூபாய்க்கு எங்க போவது.

பெட்ரோல் 73, டீசல் 66 என்கிற விலையையாவது குறைந்தபட்சம் 10 ரூபாய் குறைத்தாலே போதும் ஓரளவு விலை குறையுமென எங்கள் தெருவின் கடைக்காரே சொல்கிறார். 

வங்கி மற்றும் பல்வேறு வகையில் வாங்கிய கடன்/லோனிற்கான வட்டியை, வீட்டு வாடகையை எப்படி கட்டுவது. சிறு தொழில், சிறு உற்பத்தியாளர்கள் எங்கள் பகுதியில் பலபேர் உள்ளனர். சாமானியனையும் தாண்டி அவர்களையும் ஜிஎஸ்டி, இஎம்ஐ கழுத்தை நெருக்குகிறது. 

எங்கள் பகுதியின் பனியன் கம்பெனிகளையும் மூடிவிட்டார்கள் இதுவரை செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்க ஆர்டர் கொடுத்தவர்களிடமிருந்து பணம் வரவில்லை. எனவே ஊதியமுமில்லை.

கொரானா தொற்றை கட்டுபடுத்த இன்னும் எத்தனை நாட்கள் தாங்கள் வீட்டிலிருக்க சொல்லுகிறீர்களோ அத்தனை நாட்கள் நாங்கள் இருக்க தயாராயுள்ளோம்.  எங்கள் அருகாமையில் இருப்போரையும் ஒத்துழைக்க செய்வோம்.

பணமதிப்பு நீக்கத்தை ஒரே இரவில் நீங்கள் அறிவித்த போது கருப்பு பணத்தை ஒழித்து எங்கள் அக்கவுண்டில் 15 இலட்சத்தை போடுவதாக சொன்னீர்கள் ஆனால் நம் தேசத்தின் சொத்தான ரிசர்வ் வங்கியிலிருந்து ஒன்னறை இலட்சம் கோடியை எடுத்து பாவபட்டு கஸ்டப்படும் அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

அந்த முதலாளிகள் யாரும் ஒரு பைசா மக்களுக்காக இதுவரை உதவியதில்லை ஆனால் பெட்ரோல் டீசல் இலாபத்தில் மட்டும் மத்திய அரசோடு பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

சாமானிய மக்கள் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.  மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள உணவு தானியங்கள் 6500 கோடி டன்னில் சிறு பகுதியையாவது மக்களுக்கு கொடுக்க முன்வாருங்கள்.

ஒரு மாநில அரசு கேரளா 20 ஆயிரம் கோடி ஒதுக்கும் போது ஒட்டு மொத்த தேசத்திற்கே 15 ஆயிரம் கோடி எந்த மூளைக்கு போதுமானதாக இருக்கும். உங்கள் அதிகாரிகளை கடந்து வருவதற்கே இது போதுமானதல்ல.

வெறும் கையில் நீங்கள் முழம்போடுவதை நம்பும் எங்கள் பகுதியில் உள்ள உங்கள் கட்சி தொண்டர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் கேட்கிறோம்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே வழக்கம் போல் உங்க ஸ்டைலில் இன்னும் சில நாட்களில் இரவு 8 மணிக்கு வந்து ஏதேனும் அறிவிப்பு செய்வீர்கள் என நம்புகிறோம்.

-க.நிருபன் சக்கரவர்த்தி

தேசிய வெறி கொண்டவர் மக்களை காப்பாற்ற முடியாது

தேசிய வெறி கொண்டவர் மக்களை காப்பாற்ற முடியாது 
---------------------------------------------------

அமெரிக்காவில்  கொரனா  மிக வேகமாக பரவ காரணம் டிரம்பின் 
புதிய  குடியுரிமை  கொள்கைகள்  தான். 
கொரனா  வேகமாக  பரவி வரும்  நேரத்தில்  பிரபவரி  20 அன்று  
PUBLIC  CHARGE RULE  
என்று   ஒன்றை அமுல்படுத்துகிறார் .

அதில்  அமெரிக்காவில்  சட்ட பூர்வமாக  இருக்கும்  (legal immigrants) அரசின்  மருத்துவ  மற்றும்  இதர திட்டங்களை  பயன்  படுத்தினால்  அவர்களுக்கு  நிரந்தர  குடியுரிமை  ( green card)
கொடுபதை பற்றி  யோசிக்கும்  என்று  உள்ளது. 
அவர்கள்  யார்  மூலம்  அமெரிக்கா  வந்தார்களோ அவர்களுக்கும் சில 
Check வைத்தார். 

இதனால்  பயந்து  கொண்டு  பலர் 
இந்த  இக்கட்டான  நேரத்திலும் 
மருத்துவம் மனை மற்றும்  மருத்துவ  வசதிகள்  பெறுவதை 
தவிர்த்தனர். 

அமெரிக்க  சொல்லும்  ஏரளமான 
Mexico  வில்  இருந்து  வந்த  
Illegal immigrants  நிலையோ 
இதை விட மோசமானது. 

இதுவே அமெரிக்காவில்  குரானா 
வைரஸ்  வேகமாக  பரவியது  என்று  குற்றச்சாட்டு  எழுந்துள்ளது 

இந்த  legal immigrants  பெரும்  பகுதி  இந்தியர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தான்  இந்தியாவின்  நண்பர்  என்கிறார்  பிரதமர் .

ஏழு  கடல் களை தாண்டி 
நாடுகளை,அந்நாட்டின்  மக்களை 
சுரண்டிய கொழுத்த ஏகாதிபத்திய  அமெரிக்கா எங்கே. 

கண்டங்களை தாண்டி
மருந்து, மருத்துவர்கள், ஊழியர்களை நாடுகளுக்கு
அனுப்பி  மனித  சேவை செய்து  கொண்டு  இருக்கும் 
சோஷலிச  நாடுகள்,  சீனா, 
கியூபா  எங்கே. 

#imperialismkills
#socialismprotectsmankind

Narasimhan Sankariah

Wednesday, March 18, 2020

இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் மார்க்சீய சிந்தனையாளர் தோழர் இஎம்எஸ் நினைவு தினம் இன்று

இந்திய துணைக்கண்டத்தின் மாபெரும் மார்க்சீய சிந்தனையாளர் தோழர் இஎம்எஸ் நினைவு தினம் இன்று... 
உலக வரலாற்றில் மக்களால் ஓட்டு போட்டு முதன்முதலில் தேர்தெடுக்கபட்ட கம்யூனிஸ்ட் முதல்வர்..

இந்திய முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் சேவகம் செய்து வந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் 1957 பொது தேர்தலில் காங்கிரசை தோற்கடித்து கம்யூனிஸ்ட் அரசவையை அமைத்தார்..

மாணவர்களுக்கு மதிய உணவு, நிலசீர்திருத்தம், தொழிலாளர் உரிமை, விவசாயிகள் பாதுகாப்பு, தோட்டத்தொழில், தேயிலை போன்ற மலையக தொழிலாளர்களின் ஊதிய உத்திரவாதம், சங்கம் சேரும் உரிமை, மருத்துவம் சுகாதாரம் விரிவுபடுத்தியது, பெண்கள் மீதான சாதிய கட்டுகளை உடைத்து உரிமைகளை நிலைநாட்டியது... போன்ற எண்ணற்ற புரட்சிகரமான நடவடிக்கைகள் மூலம் கேரளத்தை சிவக்க செய்தார் இஎம்எஸ்...

நேருவின் காங்கிரஸ் அரசாங்கம் கேரளத்தை கண்டு அஞ்சிநடுங்கியது மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஒரு கம்யூனிஸ்ட் அரசவை இருப்பதை பொருத்து கொள்ள முடியாமல் அமெரிக்க உளவுதுறை சிஐஏ மூலம் சதி தீட்டியது ..

வன்முறை வெறியாட்டங்களை திட்டமிட்டு தூண்டப்பட்டதை தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டம் 356யை பயன்படுத்தி இரண்டே ஆண்டுகளில் 1959ல் கேரள மக்கள் அரசை மத்திய அரசு கலைத்தது..

ஆனால் அதன் பிறகு பல முறை கேரளத்திலும், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மலர, வழிநடத்த எடுத்துகாட்டாய் சிறந்த அனுபவமாய் அந்த இரண்டு ஆண்டுகள் அமைந்து போனது...

முதலாளித்துவ அரசிற்குள் மக்களுக்கான போராட்டங்களோடு பாரளுமன்றத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை செயல்யுக்திகளையும் வகுத்தளித்ததில் இஎம்எஸ் முன்னோடியாக உள்ளார்..

அவரின் சம காலத்தில் அவர் சந்தித்த அதே ஆட்சி கவில்பு சதிகளை மற்றொரு மக்கள் தலைவனும் சந்திதார் அமெரிக்க ரௌடி சிஐஏ மூலம் படுகொலை செய்யபட்ட சிலி அதிபர் சால்வடார் அலெண்டே தான்..

முதலாளிதுவம் ஒருமுறை விழ்த்தப்படும்போது மீண்டும் அது நூறு மடங்கு பலத்தோடு எதிர் தாக்குதலை தொடுக்கும் என்ற மாமேதை லெனின் கூறியதற்கேற்ப ஆட்சி மாற்றம் மட்டும் தீர்வல்ல அடிப்படையே மாற்றி அமைப்பது அனைத்து பகுதிகளையும் புரட்சிகரமாக்குவது...

இஎம்எஸ் எந்தவொரு சூழலிலும் பாராளுமன்றமே தீர்வென்று கூறியதில்லை மக்கள் போராட்டமும் புரட்சிகர நடவடிக்கைகளுமே அவசியமானது அதன் ஒரு பகுதிதான் பாராளுமன்றத்தை பயன்படுத்துவது...

ஆயுதம்தாங்கிய போராட்டமா? மக்கள் போராட்டமா? நாடாளுமன்றவாதமா? எனும் போது இந்திய ஆளும் வர்க்கத்தை வீழ்த்த தற்போதைய சூழலில் மக்கள் போராட்டங்களையும் அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதும் அடங்கும்...

அதே வேளை புரட்சிகரமான நடவடிக்கைகளின் வளர்ச்சி போக்கில் எதிரிகளை வீழ்த்துவதற்கான ஆயுதங்கள் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

முதலாளிதுவ அரச கட்டமைப்பிற்குள் மக்களுக்கான அரசை கட்டமைப்பதே போராட்டத்தின் மிகமுக்கிய பகுதிதான் கேரளத்தில் இன்றும் மக்களுக்கான அரசாக இருந்து கொண்டு மத்திய அரசை வலுவாக எதிர்த்து போராடிவருகிறது...

தோழர் இஎம்எஸ்சின் 
நினைவை போற்றுவோம் 
ரெட்சல்யூட் சகாவே...

-க.நிருபன் சக்கரவர்த்தி 
19.03.2020

Monday, March 9, 2020

சர்வதேச மகளிர் தினம்

Rajasangeethan 
#OTD

இதோ வந்து விட்டது சர்வதேச மகளிர் தினம். இந்த நாளுக்கான வரலாறை எந்த வெகுஜன ஊடகமும் பதிவு செய்யாது என்ற அபரிமிதமான நம்பிக்கையுடன் இப்பதிவை எழுதுகிறென். அதிகபட்சம் போனால் துப்பட்டா பறக்கவிட்டு, அழகை மட்டுமே பெண்ணின் அடையாளமாக ஆக்கும் நிகழ்ச்சிகளும் தனிமனிதவாதம் ததும்பும் பேட்டிகளும் இந்த நாளை நிரப்பக்கூடும். ஆனால் இவை எதுவுமல்லாத காரணங்களுக்குத்தான் மகளிர் தினம் அனுஷ்டிப்பு தொடங்கப்பட்டது.

மகளிர் தினம் தோன்றியது பெண்களின் போராட்டம் ஒன்று அமெரிக்காவில் 1857ம் ஆண்டு முறியடிக்கப்பட்டதன் நினைவாகத்தான் என இணையமெங்கும் தகவல் பரப்பப்படும். நம்பாதீர்கள். வழக்கம் போல் கம்யூனிச வரலாறை மறைக்க விரும்பும் அமெரிக்க வருடிகளின் கட்டுக்கதை அது. ஆனால் பெண்ணுக்கான தினமென முதலில் கொண்டாடப்பட்டது 1909ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவில்தான். கொண்டாடியது அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி. பெண்களுக்கான ஓட்டுரிமையையும் சமூக அங்கீகாரத்தையும் வேலை நேர குறைப்பையும் வலியுறுத்தி திரண்ட கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெண்ணுக்கான தினம் கொண்டாடப்பட வேண்டிய தேவை ஐரோப்பாவுக்கும் பரவியது. 1910ம் ஆண்டு சர்வதேச சோஷலிச மகளிர் மாநாடு நடந்தது. க்ளாரா ஜெட்கின் போன்றோரின் முன்னெடுப்பில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினமென ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டுமென்ற முடிவெடுக்கப்பட்டது. ஓட்டுரிமை மற்றும் வேலையில் பாலின சமத்துவம் ஆகியவை வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. பாரிஸ் கம்யூன் அரசை நினைவு கூறும் வகையில், மார்ச் 9, 1911ம் ஆண்டில் முதல் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். எல்லாம் சரி, ஏன் மார்ச் 8 என்று கேட்கலாம்.

ரஷியாவில் புரட்சியின் தொடக்ககாலத்தில், பிப்ரவரி 23, 1917 அன்று பிரம்மாண்டமான போராட்டம் ஜார் மன்னனின் அரசை எதிர்த்து பெண்கள் தொடுத்தனர். தலைமை தாங்கியது அலெக்சாந்த்ரா கொலந்தாய். முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம் அது. ஜார் மன்னனின் அரசு உணவு விநியோகத்தை போரின் காரணமாக கட்டுப்படுத்தியது. அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை. உழைக்கும் பெண்களின் தலைமையில் மொத்த ரஷ்ய பெண்களும் ஜார் மன்னனுக்கு எதிராக வெகுண்டெழுந்து ‘Bread and peace' என முழங்கினர். போர் தேவையில்லை என்றும் உணவும் அமைதியுமே தேவை எனவும் கோஷங்கள் எழுப்பினர். ஜாரும் வீழ்ந்து, அக்டோபர் புரட்சியும் வெல்லப்பட்ட பின், சோவியத் யூனியனில் அலெக்சாந்த்ரா கொலந்தாய் மற்றும் லெனினால் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது, மட்டுமல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் உறுதிப்படுத்தப்பட்டது. கருக்கலைப்பு உரிமையும் வழங்கப்பட்டது. பெண்ணுக்கான முதல் அரசு பதவிகள் வழங்கப்பட்டன. பிப்ரவரி 23 என்பது ஆங்கில காலண்டரில் மார்ச் 8 ஆகும்.

1970கள் வரை மகளிர் தினம் சோஷலிச நாடுகளான ரஷியா, சீனா ஆகியவற்றில் மட்டும்தான் கொண்டாடப்பட்டது. 1975 வாக்கில்தான் ஐ நா அங்கீகரித்தது. அமெரிக்கா செய்தது என்ன? சீனாவிலும் ரஷியாவிலும் உழைக்கும் மகளிர் தினம் என கொண்டாடப்படும் நாளை, சர்வதேச மகளிர் தினம் என மட்டும் சுருக்கி கொண்டாட காரணம் அமெரிக்காதான். அப்படித்தான் பெண்ணை ஒரு சந்தைப்பொருளாக மீண்டும் ஆக்க முடியுமல்லவா?

சோவியத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட உழைக்கும் மகளிர் தின படங்களை இங்கு இணைத்திருக்கிறேன். இன்றின் பெரும்பான்மையான மகளிர் தின படங்களை பாருங்கள், இவற்றில் இருக்கும் பெண்களின் அரசியலுணர்வை பெற்றிருக்காது. ஏனெனில் இன்று கொண்டாடப்படுவது சர்வதேச மகளிர் தினம்தான். உழைக்கும் மகளிர் தினம் அல்ல. சர்வதேச மகளிர் தினத்தில் தாய்மையை, காதலை, அன்பை எல்லாம் கொண்டாடலாம். உழைக்கும் மகளிர் தினத்தில் அரசியலுணர்வை, அதிகார பிரதிநிதித்துவத்தை, சமத்துவத்தை வலியுறுத்த வேண்டியிருக்கும்.

மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் காரணமும் தேவையும் என்ன தெரியுமா? அது கொண்டாடப்படும் காலத்தில், சமூகரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண் சந்திக்கும் பிரச்சினைகளையும் கடக்க வேண்டிய பாதையையும் அடையாளப்படுத்திடத்தான்.

இங்குள்ள படங்களாகத்தான் இன்று நீங்கள் கொண்டாடும் மகளிர் தினம் தொடங்கப்பட்டது என்பதை ஞாபகத்தில் இருத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் இருக்கும் பெண் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் எங்கே இருக்கிறார் என்பதை ஆராய்ந்து அறிந்து அவருக்கும் அதை அறிவுறுத்துவதிலிருந்து இன்றைய கொண்டாட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம்.