Wednesday, January 29, 2020

மனு கொடுக்கும் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பூர் வடக்கு ஒன்றியம், நெருப்பெரிச்சல் பகுதி கிளைகள் சார்பில் நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலகம் பூலுவபட்டி முன்பு இன்று காலை 10 மணிக்கு மனு கொடுக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.சிகாமணி தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி
மாநில குழு உறுப்பினர் தோழர் k. காமராஜ்
திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
தோழர் k.பழனிச்சாமி ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பானுமதி p.மகாலிங்கம், கிளை செயலாளர்கள் s. அழகு, m.செல்வராஜ் மற்றும் தோழர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தின் நிறைவாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை 2, 3 ,4, 5 ஆகிய வார்டுகளில் 8 முகாம்களில் எழுதப்பட்ட மனுக்களை கொண்டுவந்தபொதுமக்களிடம் நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருப்பூர் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் மேற்கண்ட உதவித்தொகை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.


Sigamani Mabl sigamani arumugam

No comments:

Post a Comment