Tuesday, January 11, 2022

கேரளாவில் காங்கிரஸின் கடைசி அத்தியாயம்

தோழர் தீரஜ் படுகொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் SFI - DYFI சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

நேற்றையதினம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரி மாணவரும் இந்திய மாணவர் சங்க உறுப்பினருமான  தோழர் தீரஜ் மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரியில் நடைபெற இருக்கும் மாணவர் பேரவை தேர்தலில் SFI சார்பில் B.tech நான்காம் ஆண்டு படிக்கும் மாணவரான தோழர் தீரஜ் பேரவைத்தலைவராக போட்டியிட இருந்தார். அரசியல் விழிப்புணர்வு மிக்க பிரச்சாரம் மற்றும் பணிகளால் வெற்றி உறுதியானதால். காங்கிரஸ் மாணவர் அமைப்பான KSU படுதோல்வி அச்சத்தில் இளைஞர் காங்கிரஸ் ரவுடி குண்டர்களை வைத்து கத்தியால் சரமாரியாக குத்தி தீரஜை படுகொலை செய்துள்ளது. உடனிருந்த இரண்டு மாணவர் சங்க தோழர்களும் கடுமையாக தாக்கப்பட்டு கொடுங் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் RSS அமைப்பை இந்துதுவ பயங்கரவாதத்தை வளர்ப்பதில் காங்கிரஸின் வலதுசாரி அரசியல் இன்று வரை துணைபுரிந்து  வருகிறது. கேரளத்தில் ஏற்பட்டு வரும் இடது ஜனநாயக மாற்றத்தில் SFI ன் பங்கு மகத்தானது. RSS, BJPயை எதிர்க்க துணிவில்லாமல் உத்திரபிரதேசத்தை விட்டு வயநாடு ஓடி வரும் அமைப்பல்ல எங்கள் அமைப்பு. ஒட்டுமொத்த கட்சியையும் திரிபுராவில் RSSற்கு விற்றுவிட்டு கோஸ்டிபூசல் அரசியல் செய்பவர்களுக்கு எப்படி தெரியும். மாணவர்களை அரசியல்படுத்தி சாதி, மத, வர்க்க முரண்பாடுகளை முன்வைத்து போராட்டங்களையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கும் தோழர் தீரஜ் அருமை. ABVP பாசிச கும்பலோடு இணைந்து KSU, இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் செய்துள்ள இந்த படுபாதக கொலை காங்கிரஸின் இறுதி அத்தியாயத்தை கேரளத்தில் தனக்கு தானே எழுதியுள்ளது.

இந்திய சமூகத்தில் நிலவும் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்குமான முரண்பாட்டில் காங்கிரசின் அரசியல் ஒரு மண்ணும் புடுங்க போவதில்லை.

No comments:

Post a Comment