கன்னியாகுமரியில் பெற்ற வெற்றியை #பாஜக தமிழகம் முழுவதும் பெற்ற வெற்றியாக ஊதிபெருக்குகிறது.
பாஜக பெற்ற 22 மாநகராட்சி வார்டில் 11வார்டு நாகர்கோவிலில் பெற்றுள்ளது.
58 நகராட்சி வார்டில் சுமார் 40 வரை குமரியில் மட்டுமே பெற்றுள்ளது.
230 பேரூராட்சி வார்டில் 170 வரை குமரி மாவட்டத்தில்.
இப்படி இருக்க பொய்யான பரப்புரையை பாஜக செய்கிறது. அதன் தளமாக அறிவித்த அக்கா வானதி சாவால்விட்ட கோவையில் 67 மாநகராட்சி வார்டில் டெப்பாசிட் இழந்துள்ளது. பல நகராட்சி பேரூராட்சி இடங்களில் ஒத்த ஓட்டும், பூஜியமும் வாக்கியுள்ளது.
எச்ச.ராஜா, நயினார் நாகேந்திரன் சொந்த ஊரில் படுதோல்வி. தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த தளமும் தகர்ந்து போனது.
உண்மையில் பாஜக சென்னை மாநகராட்சி தேர்தலில் பெற்ற ஒரே ஒரு வார்டு மட்டுமே அதற்கான வெற்றியாகும்..
குமரியில் திமுகவும், காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் தனிதனியே நின்றதன் விளைவாய் கொள்கைசார்ந்த ஓட்டுகள் சமமாக பிரிந்துள்ளது. பாஜக வழக்கமாக பெறும் குமரியில் உள்ள வலதுசாரி சிந்தாந்ததிற்கான வாக்கையே தற்போது பெற்றுள்ளது. அதுவும் பர்சன்டேஜ் வரும்போது குறைய வாய்பிருக்கும்.
பாஜகவை தொடைக்க வேண்டியது முதலில் குமரியில் தான் அற்கு குமரியில் இனி வருங்காலங்களில் திமுக, காங்கிரஸ் "பஸ்ல ஏறுனாலும் கம்பிய பிடிக்காம போவோம்''னு சொல்லாம நியாயமான கொள்கைவழி உடன்பாடை செய்தால் அங்கும் பாஜகவை துடைத்தெரியலாம்..
பாஜகவின் இறுதி அத்தியாயத்தை இத்தேர்தல் காட்டுகிறது. நாம் சுயமரியாதை, சமூகநீதி, முற்போக்கு ஜனநாயக பாரம்பரியத்தை இடதுசாரி அரசியலை முன்னெடுப்பதே அதை விரைபடுத்த ஒரே வழி.
22.02.22
#LocalBodyElections2022 #LocalBodyElection #LocalBodyElections #localbodyelection2022 #TNElectionResults #CPIM #DMK #Congress #BJP #kanniyakumari
No comments:
Post a Comment