உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி இராணுவ உடை தரித்து களத்தில் இருப்பது போன்ற புகைப்படம் உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலாக காட்டப்படுகிறது.
முதலாளித்துவ ஊடகங்கள் 'மாவீரன், தாய்நாட்டை காக்க களத்தில் இறங்கிவிட்டார்''' என்றெல்லாம் பராகிரமத்தை அள்ளிவிடுகிறது.
அமைதிநாடி பேச்சுவார்த்தை வேண்டும் என நாம் விரும்புவதற்கும் மேற்குலக நாடுகளின் கொம்புசீவுவதற்குமான வித்தியாசத்தை தெளிவாக உணர முடிகிறது.
ஒரு காமெடி நடிகரை உசுபேத்தி மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்த பன்னாட்டு ஊடகங்கள் முயற்சிக்கிறது.
இந்த பிரச்சினையின் அடிநாதமே அமெரிக்கா, நேட்டோவை தவிர்த்து பார்த்தால் உக்ரைனிடமிருந்தும் துவங்குகிறது. 15,000 இரஸ்ய இனத்தவரை படுகொலை செய்ததுவரை பொறுத்திருந்து பார்த்து அமைதிக்கும் ஒரு அளவுண்டு என சொல்லியே வெறுப்பின் உச்சத்திலிருந்து ரஷ்யா இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எனவே இரஷ்ய நிபந்தனைக்கு உடன்பட்டு உக்ரைன் ஆயுதங்களை போட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும்.
இறுதிவரை எடுத்து செல்ல வேண்டும் என்ற அமெரிக்க நேட்டோவின் சூட்சமத்திற்கு உக்ரைன் இரையாகிவிடக்கூடாது.
அமெரிக்கா, பிரிட்டன் ஏற்கனவே தூண்டிவிட்டு ஓடி ஒழிந்த கதையை உணர்ந்துதான் மனநொந்து பேசினார் ஜெலன்ஸ்கி. இனிமேலாவது தன் உண்மை சகோதரன் ரஷ்யா என்பதை உணர வேண்டும். நாம் ஏன் தனித்துவிடப்பட்டோம் என்பதை தார்மீகமாக உணரவேண்டும்.
#peace #RussiaUkraine #RussiaUkraineConflict #NATO #ukraine #negotiation #russia
No comments:
Post a Comment