இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர செயல்..
அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் படுகொலை ..
உலக ரெளடி அமெரிக்காவின் கைகூலி
இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷிரின் அபு அக்லா பாலஸ்தீன பத்திரிகையாளர். இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீரா பத்திரிகையில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டபோது ஷிரின் பத்திரிக்கையாளர்களுக்கான தற்காப்பு ஆடையையே அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஷிரின் அபு அக்லாவின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளனர்.
கடந்த மாதம் இறுதியில் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
இதனை அல் ஜசீரா உள்ளிட்ட பத்திரிகைகள் இஸ்ரேல் ராணுவத்தின் இத்தகைய அடாவடித்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதே இந்த படுகொலைக்கு காரணமாக இருக்கும் என தெளிவாகிறது.
No comments:
Post a Comment