அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தோல்வியை மறைக்க தன் சொந்த மக்களையே கண்மூடித்தனமாக சுட்டுதள்ளும் அளவிற்கு வந்துள்ளது. இனவாதம் உச்சம் பெற்று ஒட்டுமொத்த மனிதர்களுக்கு எதிரான அரசபயங்கரவாதமாக தோலுரிக்கப்பட்டு நிற்கிறது.
தவறு செய்தவர்களுக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தாத டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையே சுட்டு தள்ள துணிந்துள்ளது. ஆடுகள் ஓநாயிகளிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. மனித ஓநாய்களாக மாறிபோன பாசிச வெறிபிடித்த அமெரிக்க எந்திரங்கள் மனித இரத்தங்களை சுவைபார்த்து வருகிறது.
ஒட்டுமொத்த உலகின் பயங்கரவாத நடவடிக்கைகளின் ஊற்றுகண்ணாக, கார்பரேட் கொள்ளையர்களின் தலைமைபீடமாக உள்ள அமெரிக்க அரச பயங்கரவாதிகளின் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்த உலக மக்கள் இணைந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தன் சொந்த மக்களையே சுட்டுதள்ளும் முதலாளிதுவத்தின் தலைமை நாடு அமெரிக்க ஐக்கியம். நாளை உலக மக்கள் அனைவரையும் படுகொலை செய்வதற்கு வழிகாட்டுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியமே போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று. இனவாத நடவடிக்கைகளை உடனடியாக கைவிடு. தவறு செய்த காவல்துறை அதிகாரிகளை உடனே கைது செய். போராடும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒரு சதம் மக்களிடம் குவிந்துள்ள சொத்துகள் அனைத்தையும் தேச நலனிற்காக பொதுமக்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்து.
#protests2020 #bostonprotest #GeorgeFloyd #riots2020 #USAProtest #USRIOTS #USAonFire #TrumpHasNoPlan #minneapolisriots
No comments:
Post a Comment