இந்திய தேசத்தின் 73வது குடியரசு தினத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி.
மத்திய சென்னை மாவட்டம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மாமேதை பாபாசாகேப் அம்பெத்கரின் சிலை முன்பு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
"இந்திய அரசியல் சாசன முகப்புரை
இந்தியர்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாக அமைக்கவும்.,
அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக,பொருளாதார, அரசியல் ஆகியவற்றில் நீதி .,
எண்ணத்தில், வெளிப்படுத்துதலில், நம்பிக்கையில், பற்றுறுதியில் வழிபடுதலில் சுதந்திரம்.,
தகுதிநிலையிலும், வாய்ப்புரிமையிலும் சமநிலையை உறுதியாக கிடைக்கச் செய்யவும்.,
தனியொருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம் பெற்றிட.,
என உள்ளார்ந்து உறுதியேற்று செயல்படுவோம்.
மேலும், ஒன்றிய அரசின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான பாசிச நடவடிக்கை குறித்து, வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் நேதாஜி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் மகத்தான பங்களிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டது.
#Republicday2022 #republicdayindia #RepublicDay #SFI #SFItamilnadu
No comments:
Post a Comment