ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் தனக்கு பிடித்த மத அடையாளங்களை பயன்படுத்துகிறார். ஆனால் எந்த மத அடையாளத்தையும் முன்னிறுத்தாமல் ஜனநாயகத்தை முன்னிருத்துவதே பிரதமர் உள்ளிட்டவர்களின் கடமை.
அதேபோல் ஹிஜாப் அணிவது, டர்பன் கட்டுவது, பூணுல் போட்டுக்கொள்வது என தனிமனிதர்களின் மத அடையாள்ங்களை இந்தியக்குடிமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 25 கூறுகிறது.
ஆனால் நேர்மாறாக பிரதமரை கண்டிக்க வேண்டியவர்கள் மாணவர்களையும், குடிமக்களையும் நிர்பந்திப்பது சட்ட விரோதமாகும். இதற்கு கர்நாடக அரசே துணைபோவது ஏற்புடையதல்ல. மதக்கலவரங்களை தூண்டி அரசியல் லாபம் அடைய துடிக்கும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கும்பலை மக்கள் தனிமைபடுத்த வேண்டும்.
கர்நாடகாவில் போராடும் மாணவிகளுக்கு அங்குள்ள பொதுமக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, தேசபற்றுமிக்க மக்கள் துணைநிற்க வேண்டும்.
No comments:
Post a Comment