Thursday, January 30, 2020

மோடியின் சீடர்கள்

January 30, 2020Uncategorized

டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் CAA வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட பாசிச மதவெறியன். ஒரு மாணவர் படுகாயம்.
வேடிக்கை பார்க்க்கும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி(மோடி) போலிஸ்.


காந்திஜியை சுட்டுக்கொன்ற அதே தினத்தில் அதே #RSSகொலைவெறி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

Wednesday, January 29, 2020

மகாத்மாவை படுகொலை செய்த மோடியின் முன்னோடி கோட்சே

January 30

மாகத்மா காந்தியை படுகொலை செய்த நரேந்திர மோடியின் முன்னோடியும் பிஜேபியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சின் உறுப்பினரான நாதுராம் விநாயக் கோட்சே காந்தியை கொலை செய்வதற்கு முன் கையில் இஸ்மாயில் என பச்சைக்குத்தி சுன்னத் செய்து கொண்டு இஸ்லாமியனாக தன்னை வெளிப்படுத்தும் வகையில் வந்தான். மகாத்மாவின் தொண்டரை போல அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய போது எடுத்த படம்தான் இது.
வேடமிடுவது, கபடநாடகம், வன்முறையை தூண்டுதல், இழிவான எண்ணம், ஏமாற்றுதல் வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுப்பது, பொய், பித்தலாட்டம், பலாத்காரம், கொலைசெய்தல், கொள்ளையடிப்பது… போன்ற எண்ணற்ற செயல்களை கொள்கையாக கொண்ட அமைப்பின் கொடூரமான செயல் தான் இந்த படுகொலை. இன்றுவரை இந்த படுகொலைகள் தொடர்ந்து வருகிறது… மேற்கொண்டு படுகொலைகளை நிகழ்த்த இரத்தவெறி கொண்டு திட்டம் தீட்டி வருகிறது. இதன் துர்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதே நமது மகாத்மாவிற்கு நாம் செலுத்தும் அஞ்சலி …


மனு கொடுக்கும் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பூர் வடக்கு ஒன்றியம், நெருப்பெரிச்சல் பகுதி கிளைகள் சார்பில் நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலகம் பூலுவபட்டி முன்பு இன்று காலை 10 மணிக்கு மனு கொடுக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.சிகாமணி தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி
மாநில குழு உறுப்பினர் தோழர் k. காமராஜ்
திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
தோழர் k.பழனிச்சாமி ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பானுமதி p.மகாலிங்கம், கிளை செயலாளர்கள் s. அழகு, m.செல்வராஜ் மற்றும் தோழர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தின் நிறைவாக கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை 2, 3 ,4, 5 ஆகிய வார்டுகளில் 8 முகாம்களில் எழுதப்பட்ட மனுக்களை கொண்டுவந்தபொதுமக்களிடம் நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருப்பூர் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் மேற்கண்ட உதவித்தொகை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.


Sigamani Mabl sigamani arumugam

Sunday, January 26, 2020

கல்வி வளாகங்களை காவு வாங்க துடிக்கும் மத்திய அரசு

கல்வி வளாகங்களை காவு வாங்க துடிக்கும் மத்திய அரசு

January 26, 2020

உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் என போற்றப்படும் இந்திய தேசத்தின் தலைநகரில் அமைந்துள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து தில்லியின் மையப்பகுதிக்கு செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. நொய்டாவிலிருந்து வரும் மக்கள் தில்லியை அடைய டி.என்.டி அல்லது அஷர்தம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மதுரா சாலை மற்றும் கலிண்டி கன்ஞ் சாலை எண் 13ஏ போக்குவரத்து மூடப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி மாநகரின் பாதுகாப்பிற்கு அப்படி என்ன தான் ஆனது? சாலைகளும், மெட்ரோ இரயில்களும் கடந்த முப்பது நாட்களுக்கு மேலாக மூடப்பட யார்தான் காரணம்?.
கடந்த டிசம்பர் 6 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்சா அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை (CAB) பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் முன்மொழியப்பட்டு 12ம் தேதி குடியரசுத் தலைவர் உயர்திரு இராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலோடு சட்டமாக (CAA) நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசதிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வரும் இந்து, சீக்கியர், பார்சி, கிருஸ்தவர், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் தவிற மற்றவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதாவது இம்மூன்று நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்களுக்கும், மியான்மரிலிருந்து வந்த ரொஹிங்கியாக்களுக்கும், பூடானிலிருந்து வந்த கிருஸ்தவர்கள் மற்றும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதாக புதிய சட்டத்திருத்தத்தின்படி நேரடியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அஸ்ஸாமில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து குடியமர்ந்த மக்களால் ஏற்பட்ட மாநிலத்தின் உட்பிரச்சனைகளுக்கு தீர்வு கான தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) ஏற்படுத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. அஸ்ஸாம் மாநில பிரச்சனைக்கு தீர்வுகான உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நாடுமுழுவதும் நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை; மக்கள் தொகை பதிவேடாக (NPR) தேசம் முழுவதும் நடத்தப்போவதாக அறிவித்து இதற்காக கூடுதலாக 4 ஆயிரம் கோடி நிதியையும் அறிவித்தது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்கு மட்டுமின்றி தங்களின் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டிக்குமான பிறப்பு சான்று, பிறந்த இடம் தெரிவிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் முறையான சான்றுகளை சமர்பிக்க தவறும்பட்சத்தில் நாடற்றவர்களாக வதை முகாம்களுக்கு (Concentration camp) அனுப்பப்படும் அபாயத்திற்கு தள்ளப்படுள்ளார்கள்.
இந்த கொடுமையான சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அஸ்ஸாம் மாணவர்கள் மக்களோடு களத்திலிறங்கி போராட்டத்தை துவங்கிட அலிகார் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களும் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அமைப்புகளும் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சூழலில் மாணவர்களை ஒடுக்கினால் போராட்டத்தை கட்டுபடுத்தலாம் என்ற மூடத்தனமான நம்பிக்கையில் மாணவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவியது. அஸ்ஸாமில் மாணவர்கள் உள்ளிட்டு நான்கு பேர் பாதுகாப்புபடையின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகிட ஜாமியாவிலும், அலிகாரிலும் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலின்றி கல்வி வளாகங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதலை காவல் துறையினர் தொடுத்தனர். மேலும் கல்வி வளாகத்தின் வெளியிலிருந்து கற்களையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் காவல்துறையினர் எறிந்தது மட்டுமல்லாமல் தில்லி மாநகரின் பேருந்தையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். மேலும் சில ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காவல் துறை வேடம் அணிந்து போராடும் மாணவர்களை கொடூரமாக தாக்குவது என வன்முறையின் உச்சத்திற்கே மத்திய அரசு சென்றது.
போராட்டத்தை முன்னெடுப்பதில் முன்னிலை வகித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை கட்டுபடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பினரின் ரெளடிகுண்டர்களை கொண்டு மாணவர்களை தாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 5ம் தேதி பல்கலைக்கழகத்தின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராகவும் பருவத்தேர்வை தள்ளிவைக்க கோரியும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ் தலைமையில் மாணவர்களும் பங்கேற்றனர். அமைதியாக அறவழியில் நடைபெற்றுவந்த இப்போராட்டத்தில் ஏ.பி.வி.பி அமைப்பினர் மாலை 6 மணியளவில் முகத்தை மறைத்துக் கொண்டு முகமூடிகளுடன் கைகளில் இரும்பு ராடுகள், குண்டாந்தடிகள் உள்ளிட்ட கொலைக்கருவிகளைக் கொண்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கத் துவங்கினர். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இக்கொலைவெறித் தாக்குதலில் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ், பேராசிரியர் சுச்சாரிடா உள்ளிட்ட 39 பேர் கடுமையாக தாக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து டைம் இணைய இதழில் பதிவிடும் ரானா அயூப் அவர்கள் “ஜேஎன்யு வில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் சிறுது நேரத்தில் சில பத்திரிக்கையாளர்களும் நானும் அங்கு சென்றுவிட்டோம். ஒரே இருட்டாக இருந்தது மெயின் கேட் மூடப்பட்டிருந்தது சிறிது நேரத்தில் கேட் திறக்கபட உள்ளிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் காவிநிற துணிகளால் முகத்தை மறைத்துக் கொண்டு ‘பாரத் மாதாகீ ஜே’ போன்ற முழக்கத்துடன் கைகளில் இரும்பு ராடு, கட்டை…. போன்றவற்றுடன் வெளியே வந்தனர். 200க்கும் மேற்பட்ட காவலதுறையினர் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்… வன்முறையாளர்களில் சிலர் உள்ளூரை சார்ந்தவர்கள் என தெரிந்தது அவர்களை அனுகி நான் கேட்ட போது ‘முகாலாயர்களை வளாகத்திலிருந்து சுத்தப்படுத்துவதாக’ கூறினார். மேலும் விடுதிகளில் இருந்த மாணவர்களையும், சில பார்வையற்ற மாணவர்கள் உள்ளிட்டு கடுமையாக தாக்கபட்டிருந்தனர்…. தலையில் பலத்த காயத்துடன் மாணவர் தலைவர் இருந்த ஆம்புலன்சை வெளியே பொவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர் நீண்ட நேர அலக்கழிப்பிற்கு பின் ஒரு வழியாக கடினப்பட்டு பின்புற கேட் வழியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இது குறித்த பல்வேறு வீடியோ ஆதாரங்களை நான் தில்லியின் மிக உயரிய போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் காவல்துறையோ மண்டை உடைந்து ஐந்து தையல்கள் போடபட்டிருந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவரும் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) நிர்வாகியுமான அயிசே கோஸ் மீதே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது… ஆளும் பிஜேபி அரசின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் தான் எங்களை தாக்கினார்கள் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆதரத்துடன் தெளிவாக குறிப்பிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” இது குஜராத் கோப்புகள் என்ற ஆவணத்தை வெளியிட்டு மோடி, அமிஷாவின் வன்முறை, பாலியல் குற்றங்களை வெளி கொணர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரானா அயூப்பின் பதிவுகளின் சிறு பகுதியே. மேலும் இந்தியா டுடே தொலைக்காட்சியில் ஏபிவிபி நிர்வாகி நாங்கள் தான் அடித்தோம் என்று சொன்ன ஆதரங்கள் போன்று எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் தில்லி காவல்துறையும் நீதிமன்றமும் இருக கண்ணை கட்டிக்கொண்டுள்ளது.
ஜாமியா மிலியாவில் 1000 மாணவர்கள் மீது வழக்கு புனைந்துள்ளனர். அலிகாரிலும் பாதிக்கபட்ட மாணவர்களையே சிறையில் அடைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தாக்குதல்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதில் 21 பேர் உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மிகப்பெரும் போராளியாக மோடியின் நடிப்பையே விஞ்சும் மம்தா ஆட்சி நடந்தும் வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கை மூலம் காவி கார்பரேட் அஜண்டாவை அமுல்படுத்த முயற்சிக்கும் சூழ்நிலையில் இக்கொடிய தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தற்போது (24.01.2020) இந்துதுவா பயங்கரவாதிகளின் சோதனைக் கூடமாகவுள்ள குஜராத்தின் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கத்தின் இடது ஜனநாயக சமூக நீதிக்கூட்டணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
வன்முறைகளும் கொலைக்கருவிகளும் கல்வி வளாகத்தின் கட்டிடங்களை, கதவு, ஜன்னல்களை தகர்கலாம், மாணவர்களின் இரத்தங்களை சுவைத்து நுகரலாம் ஆனால் மதச்சார்பற்ற ஜனநாயகபூர்வ கல்விக்கான மாணவர்களின் போராட்ட உணர்வில் சிறுதுரும்பை கூட அவர்களால் அசைக்கமுடியாது என வரலாறு தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

க.நிருபன் சக்கரவர்த்தி
இந்திய மாணவர் சங்கம்

Friday, January 24, 2020

Inspiring news from Gujarat Central University. SFI-BAPSA-LDSF

Inspiring news from Gujarat Central University.
SFI-BAPSA-LDSF Alliance sweeps the elections held to the students union council. Red Salutes dear fighters.

Jai bhim lalsalam❤️❤️💙💙❤️❤️💙💙✊✊

Wednesday, January 22, 2020

இந்துத்துவ தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் ஜனவரி 22, 1999

வரலாற்றில் இன்று கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது இருகுழந்தைகளும் இந்துத்துவ தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட நாள் ஜனவரி 22, 1999.

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் தொண்டுகள் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் கதற கதற உயிரோடு எரித்துக் கொன்றனர்.

இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன? அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது.

இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது. நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Saturday, January 18, 2020

SFI challenges CAA in Supreme Court: Students Federation of India vs Union of India Diary Numbr 2347 of 2020


Students' Federation of India has filed a Petition under Article 32 of The Constitution of India challanging the Constitutional Validity of The Citizenhip Ammendment Act 2019 along with the validity of the power of central government for granting class exemption under the Passport Entry Into India Act 1920 and Foreigners Act 1946.
In the instant case, SFI has sought intervention of the Hon'ble Supreme Court in order to represent the student who will be the worst suffer of these draconian Acts as it attempts to make a distinction between the Citizen and Non Citizen on the basis of relegion. SFI stated in the Petition that the impugned amnenment Act has does satisfy the duel test of Article 14 1.The Test of reasonable classification and 2.The Object sought to be achieved by this Act has no reasonable nexus with the Act itself. SFI represens the students of the Country who aspire to join in various trade,occupation and professions upon completion of their study.This CAA as a whole has become an impediment for fulfilment of their dreams as the Article 19(1)(g) of the Constotution of India gurantees the freedom of business, profession, trade only to the citizen of India.There is a substantial threat of loss of occupational,professional protection due to the NRC, NPR and the other measures undertaken under the Citizenship Ammendment Act.

Mayukh Biswas (General Secretary)
VP Sanu (President)

Wednesday, January 8, 2020

டிரம்பின் அடாவடித்தனமும், ஈரானின் தற்காப்பும்; அமைதியும் போரும் யார் கையில்

டிரம்பின் அடாவடித்தனமும், ஈரானின் தற்காப்பும்; அமைதியும் போரும் யார் கையில்

கடந்த சில தினங்களுக்கு முன் உலகமே அதிர்ந்த ஒரு கோரமான சம்பவம் அரங்கேறியது.  அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் இராக்கெட் குண்டுகளை ஏவி ஈரானின் மிக உயரிய இராணுவ அதிகாரிகள் 14 பேர் அநியாயமாக படுகொலை செய்யபட்டார்கள். அதில் ஈரானிய மக்களின் நம்பிக்கைக்குரிய ஈரான் அரசின் புரட்சிப்படை தளபதியாக இருந்த காசம் சுலைமானீ படுகொலையும் அடங்கும். இந்த படுபாதக செயலை செய்துவிட்டு டிரம்பின் இரத்தம் சொட்டும் பற்களால் மத்திய கிழக்கில் அமெரிக்க அரசு அமைதியை விரும்புவதாகவும் நேட்டோ நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கொக்கரித்தார்.

ஈரான் நாடாளுமன்றம் அந்நாட்டு மக்களின் உணர்வை மட்டுமல்ல உலக மக்களின் மனசாட்சியாக இருந்து ஒரு துணிச்சல் மிக்க தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த நடவடிக்கையாகும். அதே கையோடு தளபதி காசம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை 30 கி.மீ தூரத்திற்க்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளினிடையே நடத்தி அத்தேசமே கண்ணீர் அஞ்சலியை செலுத்தி இறுதியடக்கம் செய்தது.



ஒரு இறையாண்மை மிக்க தேசத்தின் இராணுவ தளபதியை உப்புசப்பில்லாத சில காரணங்களை சொல்லி படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசின் அடாவடிதனத்தை, சண்டித்தனத்தை, கோழைதனமாக ஜேஎன்யு மாணவர்களை தாக்கிய ஆர்எஸ்எஸ் கும்பலை போன்று எந்தவொரு முன்னறிவிப்புமின்றி பேடித்தனமாக செய்த இந்த நடவடிக்கைகளை எந்த முதலாளித்துவ நாடுகளும் கண்டிக்கவில்லை.



தற்போது ஈரான் தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தனது நாட்டிற்குள்ளேயே ஊடுருவி மிரட்டிவரும் அமெரிக்க தளங்களை தற்காப்பிற்காக தாக்கியதும் உலகின் மிகப்பெரும் அறிவிஜீவிகள் வெகுண்டெழுந்து அமைதியை நிலைநாட்ட வாய்திறந்துள்ளனர். மேலும் மூன்றாம் உலகப்போர் ஏற்படபோவதாக கப்சாவிடுகிறார்கள்.

உண்மையில் யார் அமைதியை ஏற்படுத்த முடியும் பலமிக்க ஒரு மனிதன் பச்சிளம் குழந்தையின் மீது கால்களால் அழுத்தும்போது யார் அமைதியை ஏற்படுத்த முடியும். உலகை பலமுறைகளுக்குமேல் தரைமட்டமாக அழிக்கும் அளவிற்கான ஆயுதங்களை கொண்டுள்ள மூர்க்கதனமான வெறிபிடித்த மிருகமான அமெரிக்காவின் பக்கம் உங்கள் கையை ஒரு முறை நீட்டி கண்டியுங்கள் ஒன்றும் குறைந்துவிடாது என்ன சில எழும்பு துண்டுகள் குறையலாம். 

ஈரான் ஒன்றும் அமெரிக்க அடிமை அரசுகள் போல் இல்லை தனது நாட்டின் இறையாண்மை மிக்க மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறது. தனது நாட்டின் மீதான பொருளாதார தடைகளையும் மீறி இந்தியா தனக்கான கச்சா எண்ணெய்களை அமெரக்க டாலரில் அல்லாமல் இந்திய ரூபாய்களிலேயே வாங்கிக் கொள்ளலாம் என நமக்கு ஆதரவு அளிக்கும் நாடுதான் ஈரான். அல்கொய்தா, தாலிபான், ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை கண்டு அதை தோற்றுவித்த அமெரிக்க நேட்டோ படைகளே பயந்து நடுங்கிய போது அதன் கொட்டத்தை ஒட்ட ஒட்ட ஒடுக்கியது ஈரானும் அதன் தளபதி சுலைமானீயும் தான்.

ஈரான் தேசம் தனது யுரேனிய செரிவூட்டல் நடவடிக்கைகளை உலக நாடுகளின் தோழமையான கோரிக்கையை ஏற்று நிறுத்தியது. முப்பதாண்டுகளுக்குபின் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை துவங்கியது. அணுவாய்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவோடு கையெழுத்திட்டது என பல வழிகளில் உலகின் ஜனநாயக காக்கும் நடவடிக்கைகளில் தன்னை அற்பணிப்புடன் இணைத்துக் கொண்டது.

மேலும் ஈரானின் இது போன்ற ஆக்கபூர்வ நடவடிக்கைகளை பார்த்து அமெரிக்க அடிமை அரசுகள் சவுதி உள்ளிட்டு ஈராக், சிரியா இன்னும் சில அரபுநாடுகள் என மத்தியக்கிழக்கின் பல நாடுகள் நட்புபாராட்ட ஊர் ஒன்றுபட துவங்கியது. இது அமெரிக்க படைகளின் தேவையை குறைத்துவிட்டது. அமெரிக்காவின் பித்தளாட்டம் அணு ஆயுதம், பேரழிவாயுதம், போர்குற்றம், அமைதி, பாதுகாப்பு போன்ற பசப்பு வார்த்தைகள் பாசாங்குதனங்கள் தோலுரிய துவங்கியது.

அமெரிக்க மக்களும் எதிர்கட்சிகளான ஜனநாயக கட்சியும் கூட மத்தியக்கிழக்கிலிருந்து இராணுவ துருப்புகளை பின்வாங்க கூறிவருகிறார்கள். பென்டகனும் டிரம்பை அறிவற்ற முட்டாளாக கருதுவது உலகறிந்த உண்மை. நேற்றைதினம் கூட அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஈரான் மீதான போர் குறித்து முடிவெடுக்க கூடாது என ஜனநாயக கட்சி தீர்மானம் கொண்டுவந்துள்ளது.



இப்படியான நடவடிக்கைகளோடு ஈரானின் குழாய் வழியில் உலக நாடுகளுக்கு எண்ணெய் விநியோக திட்டத்தையும், ஈரானின் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கபட்ட நிகழ்வையும் இணைத்து பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்க நேட்டோ பயங்கரவாத கும்பல்கள் தங்கள் இலாபவெறிக்காக எண்ணெய் வயல்களை சுவைக்க எடுக்கும் நடவடிக்கைகளை பின்வாங்க வேண்டும். மத்தியக்கிழக்கு நாடுகளை அவர்களே தங்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜனநாயகபூர்வ வழியில் ஆண்டு கொள்ள அனுமதிக்க வேண்டும். அமெரிக்க உளவுபிரிவான சிஐஏ வின் மூலம் மத்தியகிழக்கு மக்களின் கழிவறைகளை எட்டிபார்பதை கைவிட வேண்டும். அமைதிக்கான சூழலும் இதன் மூலம் இயல்பாகவே ஏற்பட துவங்கும்.

இந்திய அரசு தற்போது அமைதி குறித்து பேசியிருப்பது ஆறுதல் தான் அது நாம் மேற்சொன்ன வகையில் தெளிவாக பேச வேண்டும். மேலும் ஈரானோடு தனது நட்பை பலப்படுத்த, பொருளாதார சரிவை பாதுகாக்க குழாய்வழியான எண்ணெய் திட்டத்தில் இணைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மக்களுக்கான அரசின் உணர்வை மதித்து அவர்களுக்கு நாம் துணைநிற்க வேண்டும்.

ஈரான் பாக்தாத்தில் ஏவுகணைகளை வீசியதும் அமெரிக்காவின் அதிபர் டிரம்பின் குரல் மட்டும் நடுங்கவில்லை ஒட்டு மொத்த உலக பொருளாதரமே அதிர்வானது. இந்தியாவின் அனைத்து பங்குகளும் சரிந்தது தங்கம் விலை கிடுகிடுவென உயர்தது. இது மேலும் ஏற்படாமல் இருக்க அனைவரும் அமெரிக்க அரசை பார்த்து அவர்களின் ஏகாதிபத்திய வாலை சுருட்டி கொண்டு அமைதியாக இருக்க சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

-க.நிருபன் சக்கரவர்த்தி

#Iran #USA #War #ஈரான் #அமெரிக்கபடை # சுலைமானீ #அமைதி #peace #ஏகாதிபத்தியம் #கச்சாஎண்ணெய் #தங்கம்விலை #பெட்ரோல்டீசல் #வளைகுடாநாடுகள் # மத்தியகிழக்கு


Tuesday, January 7, 2020

ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்

ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என
நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்
By மாற்று ஆசிரியர்குழு January 7, 2020

தமிழில்: க.கனகராஜ்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக தாக்குதல் தொடர்பாக தி இந்து ஆங்கில ஏடு எழுதியுள்ள ‘அராஜகத்தின் முகமூடி’ என்ற தலையங்கம் தமிழில்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதல் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது .

முகமூடி அணிந்த கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது.அதிரவைக்கும் கொடூரமான இத்தாக்குதலின் காட்சிகள் ஒரு கொடும் துயரமாக இந்திய மனச்சாட்சியில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இந்த கும்பல் கல்லூரி விடுதிகளை நொறுக்கியுள்ளது. மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருக்கிறது .
திட்டமிட்ட பைத்தியக்காரத்தனமான இந்த வன்முறை பல மணி நேரங்கள் நடந்திருக்கிறது .

புதுடில்லி காவல்துறை ஒரு குற்றவாளியைக்கூட இதுவரையிலும் கைது செய்யவில்லை . இத்தனைக்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மிக மோசமான
வார்த்தைகளால் முழக்கமிட்டுக் கொண்டு மிக சாவகாசமாக நடந்து போனதை பார்க்கிறபோது காவல்துறை குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பாதுகாப்பு அரணாக நின்றதாகவே தெரிகிறது .

குற்றம் செய்ய தூண்டியவர்கள் குற்றத்தை நடத்தியவர்கள் இவர்களை மிஞ்சுகிற விசுவாசத்தை குற்றவாளிகளிடம் டெல்லி காவல்துறை காண்பித்திருக்கிறது.

ஒரு ஜனநாயக நாடாக முழுமை பெறுவது மற்றும் அதனுடைய நிறுவனங்களைப் பொக்கிஷங்களாக போற்றுவது என்கிற இந்தியாவின் கனவில் இந்த இரவு ஒரு கொடும் நிகழவாக ஆட்டுவிக்கும்.

அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள் தான். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு பின்னே யார் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமல்ல. இது இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனம்.இந்த நிறுவனத்தில் கற்பதற்கு வாரிசுவழியோ அல்லது பணமூட்டைகளோ தேவையில்லை.

பொதுவாகவே ஹிந்துத்துவா வாதிகள் அறிவு வாதத்தையும. குறிப்பாக அறிவுத்துறை அமைப்புகளையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அவர்களால் பிரதான தாக்குதலுக்கு இலக்கான தாகவே இருந்திருக்கிறது. இப்போது நடந்திருப்பதும் அதையே உறுதிப்படுத்துகிறது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் வேறுபட்ட தன்மைகள் உடைய மாணவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறது. அந்த மாணவர்களுக்கு விமர்சன பூர்வமான சிந்தனை முறையையும் அதேபோன்று அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் சிறப்பாக விளங்குவதற்கும் மிகச்சிறந்த வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்வி கேட்பதற்கான உரிமை இரண்டையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த இரண்டின் மீதும் அளவிடற்கரிய வெறுப்பும் கோபமும் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

இப்போதைய ஆட்சியாளர்கள் புரட்டுக்கும் வரலாற்றுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள். நம்பிக்கைக்கும் வெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .அதேபோன்று விமர்சனத்துக்கும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று நம்பினால் ஒழிய அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் என்கிற ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பு தான் இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டு நம்பகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.

இந்த முகமூடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்கிற பட்டியல் மிக நீளமானது . அவர்களில் சிலரது முகங்களை நீங்கள் நினைவு படுத்த முடியும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தங்களுடைய கடமையில் தவறிவிட்டார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது . அவர்கள் ஆசிரியர் என்ற முறையிலும் பாதுகாவலர் என்ற முறையிலும் தவறு செய்திருக்கிறார்கள்;என்பதோடு தாங்கள் வகிக்கிற பொறுப்பின் புனிதத்தை சீரழித்து விட்டார்கள்.

தற்போது டெல்லி காவல்துறை கமிஷனராக இருக்கக்கூடிய அமுல்யா பட்நாயக், அவரின் கீழ் உள்ள காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நூலகத்திற்குள் உள்ளே புகுந்து சட்டம் ஒழுங்கை எல்லாம் பாதுகாத்த கதை நமக்குத் தெரியும். ஆனால் இங்கு அவர்கள் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. உண்மையில் முகமூடி அணிந்து தாக்கியவர்களின் கூட்டாளியாக இருந்தார்கள் என்பதே உண்மை.

அவர்கள் முகமூடி அணிந்து இருக்கவில்லை ஆனால் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்துக் கொண்டனர். தங்கள் பெயர் பொறித்த இலச்சணைகளை (name batch) அணிவிக்காமல் விட்டதன் மூலம் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்திருந்தார்கள்.

டெல்லி நிர்வாகம் தங்களுக்கு எந்த பொறுப்பும் இந்தப் பிரச்சினையில் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலரும் மிக மேலோட்டமாக சொல்லுகிற எதிர்ப்புகள் எந்தவித நம்பிக்கை தன்மையும் இல்லாதது.

மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் அவமானகரமான இந்த செயல் தங்களது ஒப்புதலோடு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்; முகமூடி அணிந்து கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து நீதியை நிலை நிறுத்தவேண்டும்.

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...