"ஹல்லா போல் - உரக்கபேசு" - நவீன இந்தியாவின் உழைப்பாளி மக்களின் போராட்ட உணர்வை தட்டியெழுப்பிய வீதி நாடக கலைஞன் தோழர் சப்தர் ஹஸ்மியின் பிறந்த தினம் இன்று.
1989 புத்தாண்டின் இரவில் தனது ஹல்லா போல் எனும் வீதிநாடகத்தை தில்லியின் அருகேயுள்ள சந்தாபூரில் நடத்தி கொண்டிருக்கும் போது ஆளும் வர்க்கத்தின் ரெளடிகளால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் இரண்டாம் நாளே ஹல்லா போல் நாடகத்தை அவர் மனைவி மாலா மீண்டும் அரங்கேற்றி நிறைவு செய்தார்.
இன்றும் ஆயிரக்கணக்கான வீதி நாடகக் கலைஞர்கள் ஹாஸ்மியின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி இந்திய தேசத்தின் வீதிகளில் உரக்கப்பேசி வருகிறார்கள்.
"ஹல்லா போல்''
#SFI #SFI50
No comments:
Post a Comment