Monday, April 6, 2020

மதத்துவேசத்தை நிறுத்துங்கள்

KARVAANINDIABBC
இங்கிலாந்தில் கொரோனா பரவ இஸ்கான் இந்து அமைப்பின் ஒரு இறுதிநிகழ்வு காரணமாக இருந்துள்ளது.. சுமார் 1000 பேர்வரை பங்கேற்ற இந்நிகழ்ச்சி மார்ச் 12ல் நடந்துள்ளது... இது இன்றைய உலகிற்கும் இந்திய சமூகத்திற்கும் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு உணர்த்தி இருக்கிறது....
இந்த செய்தி இந்தியாவில் தப்ளீஸ் இஸ்லாமியர்கள் மீது அமில மழை பொழியும் மதவெறியர்களுக்கு ஒரு பாடம். இஸ்கான் எனப்படு கிருஷ்ண வழிபாட்டுகார்களுக்கும், தப்ளீசினருக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பொருத்தவரை எந்த வேறுபாடுமல்ல... இரண்டு நிகழ்வும் ஊரடங்கு முன்பு நடந்துள்ளது.. இரண்டையும் அரசுதான் முன்னெச்சரிக்கையுடன் கையாண்டிருக்க வேண்டும்... இரண்டுமே தவறவிட்டது அரசுதான் இஸ்கான் மார்ச் 12 என்றால் தப்ளீஸ் மார்ச் 13-15 .... பின்புதான் மார்ச் 16ல் பிரட்டனும் 22ல் இந்தியாவும் ஊரடங்கை அறிவித்தது... இங்கு எப்படி தப்ளீஸ் அமைப்பினரை போலவே இஸ்கான்களும் இந்த உலகாலாவிய நோய் தொற்றை ஆரம்பத்தில் அலட்சியம் செய்துள்ளனர்.. பிறகு இரண்டு அமைப்பின் மதத் தலைவர்களுமே தனித்திருப்பதையும் டெஸ்டிங்கையும் ஒத்துக்கொண்டதுமே நல்ல அம்சம்.... 

ஆனால் அங்கு யாரும் இந்துகள் தான் இங்கிலாந்தில் கொரோனாவை பரப்பினார்கள் என சொல்லவில்லை.... இத்தனைக்கும் போரிஸ் ஜான்சன் ஒரு கடைந்தெடுத்த வலதுசாரி... அவ்வாறு அவர் அங்கு சொல்வாரேயானால் பொதுசமூகம் அவர்மீது காரி உமிழ்ந்துவிடும்... ஆனால் இந்தியாவில் நேர்மாறாக இது சீன வைரஸ் என்பதிலிருந்து.. இஸ்லாமிய வைரஸாக மாறியுள்ளது... 
உலகின் பல வேறுபாடுகளை உடைத்தெரிந்த இந்த வைரஸ் இந்தியாவின் மதவெறியர்களின் கரடுதட்டிபோன மூளைகளையும் சரிசெய்யுமா என பார்போம்... 

கிளாடியேடர்காலத்தில் கைளில் போர்வாலுடன் இருக்கும் படைவீரர்களை எந்தவித ஆயுதகளுமின்றி அல்லது ஒரு சாதாரண தற்காப்பு கருவியை மட்டும் வைத்துக்கொண்டு அடிமைகள் மோதுவார்கள்... இதில் கொடூரமாக அடிமைகள் கொலைசெய்யப்படுவார்கள்.... இதில் அந்த படைவீரனுக்கு பழக்கப்பட்ட சிங்கம், புலி போன்ற கொடூர மிருகம் வேறு களமிறக்கப்படும்... 

அத்தகைய சூழலில் விடுதலை என்ற ஒற்றை நம்பிக்கையுடன் மட்டும் போராடும் அடிமைகளை போல் நாமும் போராடுகிறோம்.... நிச்சயம் ஸ்பார்ட்டகசும் அவனை தொடர்ந்து விடுதலைப்பெற்ற அடிமைகளையும் போல மோதிக்கொண்டே இருக்க வேண்டயது தான்..... அப்படி ஏற்படும் மாற்றம் நமக்கானதல்ல அது எல்லோருக்கானதாக இருக்கும்.... 

க.நிருபன் சக்கரவர்த்தி

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...