#ஜார்ஜ்பிளாய்ட்கு நீதி கேட்டு...
கருப்பின சகோதரன் ஜார்ஜ் பிளாய்டை இனவெறியுடன் படுகொலை செய்த அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் கொடூர காவல்துறைக்கு எதிராக போராடும் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்களை அமெரிக்க அரசு தொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக செய்து வருகிறார். இனமோதலை தூண்டியும், காவல்துறையின் பராகிரமத்தை மெச்சியும் பேசி வருகிறார்.
இந்தியாவில் மதக்கலவரம் நடப்பது எப்படி RSS அமைப்பிற்க்கும் பிஜேபிக்கும் சாதகமாக அமைகிறதோ, நரேந்திர மோடியின் பொய் ஜால்சாப்புகள் மறைக்கப்படுகிறதோ.. அதே போல் தான் அமெரிக்க ஏகாதிபத்தியமும் தனது கையாலாகததனத்தை மறைக்க முதலாளிதுவ சமூக கட்டமைப்பின் தோல்வியை மறைக்க, கொரோனாவிற்கு கொத்துகொத்தாய் செத்து மடியும் அமெரிக்க மக்களை காப்பாற்ற வக்கற்று, இனவெறியை தூண்டி வேடிக்கை பார்கிறது.
மேலும் போராடும் மக்கள் திரளின் மீதே கொலைவெறித் தாக்குதலையும் நிகழ்த்தி வருகிறது. வருகிற நவம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் வழக்கம்போல் இனவாத அரசியலை குடியரசு கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கும். அதே போல் ஜனநாயக கட்சியும் இனவாதத்திற்கு எதிரான அரசியலை பயன்படுத்த தேர்தலில் வியூகங்களை அமைக்கும்.
உலக கார்பரேட்களின் பாசிச முகத்தை பிரதிபலிக்கும் டொனால்ட் டிரம்பும் அவர் சார்ந்த குடியரசு கட்சியும் தோற்கடிக்கபட வேண்டும் என்று நம்மில் சிலர் ஜனநாயக கட்சியை ஆதரிக்கலாம் அல்லது அப்படியான மாற்றத்தை விரும்பலாம் ஆனால் போராடும் மக்களின் விருப்பம் வேறு.
2008 க்கு பிறகு ஏற்பட்ட நெருக்கடி அமெரிக்க மக்களை உண்மையான மக்களுக்கான ஜனநாயகத்தின் மீதும், சோசலித்தின் மீதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தற்போது கூட அதிபர் தேர்தல் போட்டியாளர்களில் முக்கியமானவராக திகழ்ந்த பெர்னி சாண்டர்ஸ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்க அவரின் Democratic Socialism எனும் முழக்கத்தின் வசீகரமே காரணம்.
சோஷலிசத்தின் பல்வேறு முழக்கங்களை இன்று வீதிதோறு மாணவர்கள் இளைஞர்கள் முழங்கி வருகிறார்கள். வால்ஸ்டீரீட் எழுச்சி என்பது துவக்கமே அது நியோ லிபரல் எக்கானமியை எதிர்ப்பதோடு நில்லாமல் புதிய அரச கட்டமைப்பிற்கான முழக்கமாகவும் இன்று மாறிவருகிறது.
மார்டின் லூதர், மால்கம் எக்ஸ் என அமெரிக்க வரலாற்று நாயகர்களின் சமரசமற்ற போராட்டங்களை தோலில் சுமந்து நிற்க்கும் போராளிகளில் பெரும்பாலானோராக இன்று வெள்ளையினத்தவர்.
தனது கருப்பின சகதரனுக்காக குதிரையின் கால்களுக்கிடையேயும், காவல்துறையின் லத்திக்கும், துப்பாக்கிகளுக்கும், காவல் ஊர்த்தியின் சக்கரத்திற்கும் பயமின்றி தனது உயிரை துரக்கவும் துணிந்துவிட்டார்கள்.
இன ஒடுக்குமுறையையும், பொருளாதார சுரண்டலையும் தீரமுடன் எதிர்க்க துணிந்துவிட்ட அமெரிக்க மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். அது அமெரிக்காவை மாறிமாறி ஆண்டுவரும் இருகட்சி ஆட்சிமுறைக்கு மாற்றாக அமையும். கருப்பினத்தவரின் மீதான தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகள் படுகொலைகளுக்கு கணக்கு தீர்க்கப்படும்.
-க.நிருபன்
#riots2020 #LosAngelesriots #GeorgeFloyd #torontoprotest #LAProtests #BLACK_LIVES_MATTER #pittsburghprotest #US
No comments:
Post a Comment