Thursday, April 29, 2021

ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான்

வரலாற்றில் இன்று - ஏப்ரல் 30, 1945. ஜெர்மனியின் சர்வாதிகாரி– அடொல்ஃப் ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டான். 

சோவியத் படையினர் பெர்லினில் ஜெர்மனிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கொடியை ஏற்றினர். 

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் படுதோல்வியடைந்தன. 

சோவியத் படைகள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சூழ்ந்துகொண்டன. 

சோவியத் படைகளின் கைகளில் சிக்குவதை தவிர்க்க விரும்பிய ஹிட்லர் தனது மனைவி இவா பிரானுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
அவ்வாறு இறந்துபோன இருவரது உடலையும் ஹிட்லரின் உதவியாளர்கள் தீயிட்டுக் கொளுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

#soviet #sovietunion #germany #berlin #russia #leningrad #stalingrad #JosephStalin #Hitlar #facism #socialism #communism #secondworldwar

No comments:

Post a Comment