Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Friday, April 3, 2020

கலீல் ஜிப்ரான்

இதோ இந்த கலீல் ஜிப்ரானின் கவிதையை வாசியுங்கள். 
துயரடுக்குககளில் துவண்டு கொண்டிருக்கும் மக்களும், மாட்சிமை பொருந்திய அரசுகளும்(மோடிகளும்) காட்சியாக வந்து செல்வார்கள்...

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள்
நீங்கள் மகிழ்ச்சியின் மக்கள்.
நீங்கள் சிரிக்கும் போது நாங்கள் வேதனையில் அழுகிறோம்.

எங்களை (ஏழைகளை) நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
ஆனால், நாங்கள்  எம் அனுதாபத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.

நீங்கள் எங்களை 
நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.
நாங்கள் உங்களை பார்த்து கொண்டிருக்கிறோம்
உங்கள் விநோத குரல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள்.
எங்கள் அழுகையை நீங்கள் கவனிப்பதே இல்லை
தினங்களின் கூக்குரல்களே உங்கள் செவிகளை நிறைந்திருக்கின்றன

துன்பப்பட்டு அடையும் நாடோடி மீதும் பரிதாபத்துக்குரிய விதவை மீதும் நாங்கள் இரக்கம் கொண்டு அழுகிறோம் 

ஆனால் நீங்கள் பொன்னின் ஒளி கண்டுதான் சிரித்து மகிழ்கிறீர்கள் 

ஒடுக்கப்பட்ட பலவீனர்களின் துயரங்களையும்
ஏழை மக்களின் வேதனை குரல்களையும்
 நாங்கள் செவிகொடுத்து கேட்கிறோம்
அவர்களுக்காக அழுகிறோம்

ஆனால் நீங்கள் அவற்றுக்கு செவி சாய்ப்பது இல்லை உங்கள் செவிக்கினிய ஓசை எல்லாம் 
மது கிண்ணங்களில் உரசல்களே

நாங்கள் உங்களுக்காக மாளிகைகள் சமைத்து கொடுத்தோம் 
நீங்களோ
எங்களுக்காக சவக்குழியை
தோன்றி வைத்தீர்கள் 

அரண்மனைகள் அழகிற்கும் சவக்குழிகள் அருவருப்பிற்குமிடையில்
மனித சமுதாயம் ஆயுதமேந்தி நடைபோட்டு காவல் காக்கிறது 

நாங்கள் துக்கத்தின் புதல்வர்கள் நீங்கள் மகிழ்ச்சியில் மக்கள்.
கலீல்ஜிப்ரான்.

Tuesday, March 24, 2020

இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களே கொஞ்சம் கவனியுங்கள்.

இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்களே கொஞ்சம் கவனியுங்கள். 

இன்றைய விலை நிலவரம் 
(திருப்பூர், தோட்டத்து பாளையம்)

வெங்காயம் கிலோ - 100
கத்தரிக்கா கிலோ- 120
உருளைக்கிழங்கு கிலோ - 55
முள்ளங்கி கிலோ- 60
கேரட் பீன்ஸ் கொலோ- 100
மாங்காய் கிலோ - 80
முருங்கைக்காய் ஒன்று - 10
.........etc

வேலைக்கு போகாமல் வீட்டிலிருந்தால் எப்படி வாங்குவது இந்த விலை உயர்ந்த பொருட்களை. வேலையுமில்லை கையில் காசுமில்லை. ரேசன் அரிசியில் சாதம் வடித்தாலும் எவ்வளவு நாள் குழம்பு வைத்து சாப்பிட முடியும் தெரியல. கேஸ் அடுப்பு தீறப்போகிறது கேஸ் வந்தாலும் 900 ரூபாய்க்கு எங்க போவது.

பெட்ரோல் 73, டீசல் 66 என்கிற விலையையாவது குறைந்தபட்சம் 10 ரூபாய் குறைத்தாலே போதும் ஓரளவு விலை குறையுமென எங்கள் தெருவின் கடைக்காரே சொல்கிறார். 

வங்கி மற்றும் பல்வேறு வகையில் வாங்கிய கடன்/லோனிற்கான வட்டியை, வீட்டு வாடகையை எப்படி கட்டுவது. சிறு தொழில், சிறு உற்பத்தியாளர்கள் எங்கள் பகுதியில் பலபேர் உள்ளனர். சாமானியனையும் தாண்டி அவர்களையும் ஜிஎஸ்டி, இஎம்ஐ கழுத்தை நெருக்குகிறது. 

எங்கள் பகுதியின் பனியன் கம்பெனிகளையும் மூடிவிட்டார்கள் இதுவரை செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்க ஆர்டர் கொடுத்தவர்களிடமிருந்து பணம் வரவில்லை. எனவே ஊதியமுமில்லை.

கொரானா தொற்றை கட்டுபடுத்த இன்னும் எத்தனை நாட்கள் தாங்கள் வீட்டிலிருக்க சொல்லுகிறீர்களோ அத்தனை நாட்கள் நாங்கள் இருக்க தயாராயுள்ளோம்.  எங்கள் அருகாமையில் இருப்போரையும் ஒத்துழைக்க செய்வோம்.

பணமதிப்பு நீக்கத்தை ஒரே இரவில் நீங்கள் அறிவித்த போது கருப்பு பணத்தை ஒழித்து எங்கள் அக்கவுண்டில் 15 இலட்சத்தை போடுவதாக சொன்னீர்கள் ஆனால் நம் தேசத்தின் சொத்தான ரிசர்வ் வங்கியிலிருந்து ஒன்னறை இலட்சம் கோடியை எடுத்து பாவபட்டு கஸ்டப்படும் அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

அந்த முதலாளிகள் யாரும் ஒரு பைசா மக்களுக்காக இதுவரை உதவியதில்லை ஆனால் பெட்ரோல் டீசல் இலாபத்தில் மட்டும் மத்திய அரசோடு பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

சாமானிய மக்கள் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.  மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள உணவு தானியங்கள் 6500 கோடி டன்னில் சிறு பகுதியையாவது மக்களுக்கு கொடுக்க முன்வாருங்கள்.

ஒரு மாநில அரசு கேரளா 20 ஆயிரம் கோடி ஒதுக்கும் போது ஒட்டு மொத்த தேசத்திற்கே 15 ஆயிரம் கோடி எந்த மூளைக்கு போதுமானதாக இருக்கும். உங்கள் அதிகாரிகளை கடந்து வருவதற்கே இது போதுமானதல்ல.

வெறும் கையில் நீங்கள் முழம்போடுவதை நம்பும் எங்கள் பகுதியில் உள்ள உங்கள் கட்சி தொண்டர்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் கேட்கிறோம்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே வழக்கம் போல் உங்க ஸ்டைலில் இன்னும் சில நாட்களில் இரவு 8 மணிக்கு வந்து ஏதேனும் அறிவிப்பு செய்வீர்கள் என நம்புகிறோம்.

-க.நிருபன் சக்கரவர்த்தி

Tuesday, January 7, 2020

ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்

ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என
நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்
By மாற்று ஆசிரியர்குழு January 7, 2020

தமிழில்: க.கனகராஜ்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக தாக்குதல் தொடர்பாக தி இந்து ஆங்கில ஏடு எழுதியுள்ள ‘அராஜகத்தின் முகமூடி’ என்ற தலையங்கம் தமிழில்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதல் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது .

முகமூடி அணிந்த கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது.அதிரவைக்கும் கொடூரமான இத்தாக்குதலின் காட்சிகள் ஒரு கொடும் துயரமாக இந்திய மனச்சாட்சியில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இந்த கும்பல் கல்லூரி விடுதிகளை நொறுக்கியுள்ளது. மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருக்கிறது .
திட்டமிட்ட பைத்தியக்காரத்தனமான இந்த வன்முறை பல மணி நேரங்கள் நடந்திருக்கிறது .

புதுடில்லி காவல்துறை ஒரு குற்றவாளியைக்கூட இதுவரையிலும் கைது செய்யவில்லை . இத்தனைக்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மிக மோசமான
வார்த்தைகளால் முழக்கமிட்டுக் கொண்டு மிக சாவகாசமாக நடந்து போனதை பார்க்கிறபோது காவல்துறை குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பாதுகாப்பு அரணாக நின்றதாகவே தெரிகிறது .

குற்றம் செய்ய தூண்டியவர்கள் குற்றத்தை நடத்தியவர்கள் இவர்களை மிஞ்சுகிற விசுவாசத்தை குற்றவாளிகளிடம் டெல்லி காவல்துறை காண்பித்திருக்கிறது.

ஒரு ஜனநாயக நாடாக முழுமை பெறுவது மற்றும் அதனுடைய நிறுவனங்களைப் பொக்கிஷங்களாக போற்றுவது என்கிற இந்தியாவின் கனவில் இந்த இரவு ஒரு கொடும் நிகழவாக ஆட்டுவிக்கும்.

அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள் தான். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு பின்னே யார் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமல்ல. இது இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனம்.இந்த நிறுவனத்தில் கற்பதற்கு வாரிசுவழியோ அல்லது பணமூட்டைகளோ தேவையில்லை.

பொதுவாகவே ஹிந்துத்துவா வாதிகள் அறிவு வாதத்தையும. குறிப்பாக அறிவுத்துறை அமைப்புகளையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அவர்களால் பிரதான தாக்குதலுக்கு இலக்கான தாகவே இருந்திருக்கிறது. இப்போது நடந்திருப்பதும் அதையே உறுதிப்படுத்துகிறது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் வேறுபட்ட தன்மைகள் உடைய மாணவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறது. அந்த மாணவர்களுக்கு விமர்சன பூர்வமான சிந்தனை முறையையும் அதேபோன்று அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் சிறப்பாக விளங்குவதற்கும் மிகச்சிறந்த வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்வி கேட்பதற்கான உரிமை இரண்டையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த இரண்டின் மீதும் அளவிடற்கரிய வெறுப்பும் கோபமும் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

இப்போதைய ஆட்சியாளர்கள் புரட்டுக்கும் வரலாற்றுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள். நம்பிக்கைக்கும் வெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .அதேபோன்று விமர்சனத்துக்கும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று நம்பினால் ஒழிய அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் என்கிற ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பு தான் இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டு நம்பகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.

இந்த முகமூடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்கிற பட்டியல் மிக நீளமானது . அவர்களில் சிலரது முகங்களை நீங்கள் நினைவு படுத்த முடியும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தங்களுடைய கடமையில் தவறிவிட்டார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது . அவர்கள் ஆசிரியர் என்ற முறையிலும் பாதுகாவலர் என்ற முறையிலும் தவறு செய்திருக்கிறார்கள்;என்பதோடு தாங்கள் வகிக்கிற பொறுப்பின் புனிதத்தை சீரழித்து விட்டார்கள்.

தற்போது டெல்லி காவல்துறை கமிஷனராக இருக்கக்கூடிய அமுல்யா பட்நாயக், அவரின் கீழ் உள்ள காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நூலகத்திற்குள் உள்ளே புகுந்து சட்டம் ஒழுங்கை எல்லாம் பாதுகாத்த கதை நமக்குத் தெரியும். ஆனால் இங்கு அவர்கள் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. உண்மையில் முகமூடி அணிந்து தாக்கியவர்களின் கூட்டாளியாக இருந்தார்கள் என்பதே உண்மை.

அவர்கள் முகமூடி அணிந்து இருக்கவில்லை ஆனால் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்துக் கொண்டனர். தங்கள் பெயர் பொறித்த இலச்சணைகளை (name batch) அணிவிக்காமல் விட்டதன் மூலம் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்திருந்தார்கள்.

டெல்லி நிர்வாகம் தங்களுக்கு எந்த பொறுப்பும் இந்தப் பிரச்சினையில் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலரும் மிக மேலோட்டமாக சொல்லுகிற எதிர்ப்புகள் எந்தவித நம்பிக்கை தன்மையும் இல்லாதது.

மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் அவமானகரமான இந்த செயல் தங்களது ஒப்புதலோடு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்; முகமூடி அணிந்து கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து நீதியை நிலை நிறுத்தவேண்டும்.

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...