Friday, June 18, 2021

இந்தியாவில் சாதி ஒழிப்பு

இந்தியாவில் சாதி ஒழிப்பு

இந்திய சமூகத்தின் சாதிய கட்டுமானம் உலகின் மற்ற நாடுகளின் ஏற்றதாழ்வைவிட வித்தியாசமானது. வீழ்த்த முடியாததல்ல. இன்றைக்கும் கேரளத்தில், மார்க்சிஸ்டுகள் ஆண்டவரையிலான மேற்கு வங்கத்தில் சாதியம் எந்தளவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்று காண முடியும். அதே போல் பொதுவுடைமை இயக்கம் வலுவாக உள்ள பகுதிகளில் சாதியத்திற்கெதிரான வலுவான போராட்த்தின் வரலாறு பதிவு செய்யபட்டுள்ளது, இன்று வரை தொடர்ந்து முன்னெடுத்தும் வருகிறது.
சாதிய கட்டமைப்பு தகர்ப்பது வர்க்க போராட்டத்தோடு இணைந்த பகுதி. கல்வி, வேலை, சம உரிமை, சமநீதி, சுயமரியாதைக்கான போராட்டத்தோடு இந்தியாவின் பிரதான முரண்பாடான முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான இந்திய உழைப்பாளி மக்களின் வர்க்க போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும். 

இன்று வரை சாதியம் கெட்டிபட்டிருப்பதற்கு இந்திய நிலவுடைமையை ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான அல்லது வலிகாத மாதிரி தடவிக்கொடுத்து பாதுகாத்த அரசுகளே காரணம். அம்பேத்கர், பெரியார், ஜோதிராவ் பூலே உள்ளிட்ட இந்திய சமூக விடுதலைக்கான போராடத்தின் மிகமுக்கியமான அளுமைகளை மார்க்சிஸ்டுகள் உள்வாங்கியே உள்ளோம்.

நிலச்சீர்திருத்தம், விவசாய கூலித்தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிலத்தை அடிப்படை உரிமையாக்குவது, இன்றைய கார்பரேட் வேளாண் சட்டங்களை பின்வாங்க செய்வது, பெரும் எண்ணிகையில் உள்ள முறைசாரா கூழித்தொழிலாளிகள், சிறுகுறு ஆலைகளில் பணியாற்றும் நிரந்தரமற்ற வேலைசெய்யும் தொழிலாளர் உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு, குடியிருப்பு,  அனைத்து வகையான தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்தும் போராட்டங்களை நடத்த வேண்டும்.

பன்னாட்டு நிதிமூலதனத்தை இந்தியாவை சூரையாட திறந்துவிடுவதோடு, உலக ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் செய்து கொண்டே இந்தியாவில் மிகப்பெரிய சுரண்டலில் ஈடுபடும் இந்திய பெரும் முதலாளின் நலன்களை பாதுகாக்கும் கொள்கை, கட்டமைப்பு ஏற்படுத்திக்கொடுத்து அரசையும் வழிநடத்தி வரும் பிஜேபி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 

மதங்களுக்கிடையே, இனங்களுக்கிடையே, மாநிலங்களுக்கிடையேயான முரண்பாடுகளை தூண்டிவிடுவது அவர்களின் வாழ்வாதர கட்டமைப்பான பொருளாதார நிலைமையை உணரவிடாமல் மழுங்கடிக்கிறது. எங்கெல்லாம் அடிப்படை கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் போராட்டம் வெடிக்கிறதோ அங்கெல்லாம், மதக்கலவரம், சாதியக்கலவரம், அரச பயங்கரவாதம் நடப்பதை புரிந்து கொண்டால் வானத்தை பார்த்து அட்டை கத்தி வீசும் பகில்வான்களின் இலட்சணம் புரியும்.

சினிமா வசனங்களை பேசிக்கொண்டு அடையாளங்களை முன்னிருத்தி ஆளும் வர்க்க சிந்தனைகளை அடைகாத்து வருவது எந்த வகையிலும் சாதியை ஒழிக்க முடியும். கேரளத்தின் மாற்றங்களை பொருத்துகொள்ள முடியாத சில RSS சங்கி NGOகள் கதரல் அங்குள்ள உழைக்கும் மக்களுக்கு புரியும். 

இந்தியாவில் கம்யூனிசம் பொருந்தாது, மார்க்சியம் தேவைப்படாதென அரதபழசான சிந்தனையில் உளறும் அரைவேக்காடுகளின் செயல்பாடுகள் RSS பாஜகவின் காவிகார்பரேட் திட்டங்களுக்கு சாமரவீசும்.
-க.நிருபன் சக்கரவர்த்தி

#marxism #communism #LDF #Ambedkar #Periyar #phule

Wednesday, June 9, 2021

பெருந்தொற்றுக்கு எதிரான மகத்தான சேவையில் SFI

#SFItamilnadu 

இந்திய மாணவர் சங்கத்தின் துடிப்புமிக்க தோழர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் உயிரை துட்சமென கருதி கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை பரவலுக்கு எதிராக மிக்கடுமையான பணிகளை திறம்பட செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் #SFI மாவட்டச்செயலாளர் தோழர் ஜாய்சனை நேரடியாக கைபேசியில் அழைத்து கோவிட் பெரும் தொற்றுக்கெதிரான பணியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களோடு களப்பணியில் ஈடுபட அழைத்த நாள் முதல் இன்று வரை அம்மாவட்டத்தில் முப்பது நாட்களாக கிட்டதட்ட 35 தோழர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் பணியை மருத்துவமனையின் டீன் உச்சிமுகர்ந்து பாராட்டியது அனைத்து ஊடகங்களிலும் இடம்பெற்றது. மேலும் பத்திற்க்கு மேற்பட்ட தோழர்கள் மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலும் மாணவிகள் என்பது குறிப்பிட தக்கதாகும். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர் அரவிந்தசாமி தலைமையில் 15 தோழர்கள் கடந்த இருபது நாட்களாக #CPIM அலுவலகத்தில் தங்கியிருந்து தஞ்சை மண்டலத்தின் மைய மருத்துவமனையாக இருந்து வரும் பொது மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகிறார்கள்.

கடலூர் அரசு மருத்துவமனையில் தோழர்கள் செம்மலர் மற்றும் குமரவேல் உள்ளிட்ட 15 தோழர்கள் மருத்துவமனையிலும், கிராமபுறங்களிலும் கடந்த இரண்டு வாரங்களாக களப்பணியாற்றி வருகிறார்கள். 

விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் தோழர் மாடசாமி தலைமையில் தொடர்ச்சியாக 8 தோழர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் கடந்த மே 24ம் தேதிமுதல் தோழர் ஜெ.த.வசந்த் தலைமையில் 6 தோழர்கள் மருத்துவமனையின் டீன் கேட்டு கொண்டதற்கிணங்க மருத்துவமனைக்குள் உதவிமையம் அமைத்து இன்று வரை பணியாற்றி வருகிறார்கள்.

திருப்பூர் அவினாசி அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு முகாமை தோழர் மணிகண்டன் தலைமையில் 10 தோழர்கள் சுழற்சிமுறையில் கண்கானித்து களப்பணியாற்றி வருகிறார்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தோழர் தமிழ்பாரதி உள்ளிட்ட தோழர்கள் உதவி தேவைப்படும் நேரங்களில் உடனடியாக சென்று தேவைப்படும் உழைப்பை செலுத்தி வருகிறார்கள்.

அதே போல் மதுரை, திருச்சி, நாகை, நாமக்கல், சேலம் போன்ற இன்னும் பல மாவட்டங்களில் நமது #SFI தோழர்கள்  உணவு கொடுப்பது, மூலிகை கசாயம், கொரோனா தகவல் மற்றும் உதவிமையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழகம்முழுவதும் பல்வேறு இடங்களில் #DYFI அமைப்போடு இணைந்தும் பல்வேறு களப்பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். 

மருத்துவமனை பணிகளை குறிப்பிட்டு எழுதும் நோக்கில் இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன். இதில் சில தகவல்கள் விடுபட்டிருக்கலாம். தமிழகத்தின் அனைத்து நெருக்கடியான பகுதிகளிலும் நமது #SFI தோழர்களின் உணர்வுபூர்மான தன்னார்வபணி இருந்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது முதல் கொரோனா பரிசோதனை, மருத்துவர் அறை, கோவிட் வார்டு, உணவு வழங்குதல், மருந்து வழங்குதல், கணிப்பொறி, எழுத்துபணி, கூட்டத்தை கட்டுபடுத்துதல், துப்புரவு மற்றும் உடற்கூறு அறைக்கு வெளியிலிருந்து இறந்தவர்களின் உடலை பெறுகின்ற இடம் வரை நமது தோழர்கள் பணியிருந்துள்ளது.

#COVID19 #CoronavirusPandemic #covid

Tuesday, June 1, 2021

தமிழகத்தில் மாணவிகள் மீது தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைத்திடுக.

தமிழக அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் அறிக்கை.
சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமான புகார்கள் வெளிவர தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களிலிருந்து இதுபோன்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கொரோனா  பெருந்தொற்றின்  இரண்டாவது அலை மிகத்தீவிரமாகப் பரவி வரக்கூடிய காலகட்டம் என்பதால் மாணவர்கள் வீட்டிலிருந்தே இணையவழியில் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இணையம் வழியே பாடம் நடத்தும் ஒருசில ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மாணவிகளிடம் மோசமாகவும், ஆபாசமாகவும் நடத்துகொள்வது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. 

பத்மா சேஷாத்திரி பள்ளியின் மீதான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் மேலும் சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொடரும். குறிப்பாக சென்னையில் பிரபல தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீதும் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் பிரைம் என்ற  பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அங்கு பயிற்சிக்கு வரும் அனைத்து வீரர்களையும் பாலியல் ரீதியாக சீண்டல் செய்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பாக 17 வயதுடைய மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி இருக்கிறார். அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

அதே போல் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் மாணவர்கள் 900 பேர் வரை தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். 

தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்  தமிழக  பள்ளிக்கல்வியில்  மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளோடு எதிர்காலத்தை  மனதில் கொண்டு  படிக்க வரக்கூடிய மாணவிகளிடம் இவ்வாறு பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

1. விசாகா கமிட்டி வழிகாட்டுதல்படி  மாணவிகள் மீதான குற்றங்கள் தடுக்கப்பட நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டும்.

2.இணைய வழியில் மட்டுமின்றி இயல்பான பள்ளிவேலை நாட்களிலும் இது போன்ற குற்றங்கள் நடந்துள்ளது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வியில் இது போன்ற துர்நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு எடுக்கும் சில நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையோடு கடும் தண்டனையின் விவரங்களோடு பத்திரிகைகளில் செய்தியாக்கப்பட வேண்டும்.  

3.இது போன்ற தொடர்பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படக் கூடிய தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும். 

4.பாலியல் புகார்களில் குற்றம் சாட்டப்பட்டிருக்கக் கூடிய நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டு.

5.உடனடியாக தமிழக அரசு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் இயக்கங்கள், காவல்துறை, வழக்கறிஞர்கள், மாதர் அமைப்பு மற்றும் சமூக நலத்துறை உறுப்பினர்கள் உள்ளடக்கி விசாரணை குழு அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

6.ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர், மாணவர்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை அனைவரும் அறியும் வண்ணம் அரசு வெளியிட வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.

7.ஆன்லைன் வகுப்பு மற்றும் தற்போது வெளிவரும் பல்வேறு பாலியல் குற்றங்களை புகார் செய்ய மாநில அளவில் கூடுதலாக தனி இணையதளமுகவரி, தொலைபேசி எண் போன்றவை உருவாக்கப்பட்டு அதை அனைவரும் அறியும் வண்ணம் அரசு வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின், புகார்தாரர்களின்  தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

என தமிழக மாணவர்களின் சார்பில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

ஏ.டி.கண்ணன்
மாநிலத்தலைவர்

வீ.மாரியப்பன்
மாநிலச்செயலாளர்

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...