Showing posts with label JNU. Show all posts
Showing posts with label JNU. Show all posts

Wednesday, February 16, 2022

கல்வி பறிக்கும் மோடி அரசு; மாணவர் சமூகம் பதிலடி தரும்!

கல்வி பறிக்கும் மோடி அரசு; 
மாணவர் சமூகம் பதிலடி தரும்! 

- க.நிருபன் சக்கரவர்த்தி
நமது நிருபர் 
பிப்ரவரி 16, 2022.

ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் கொள்கை இந்திய கல்வியில் மிகப்பெரிய அசமத்து வத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கல்வி கொள்கை, நீட் போன்ற மாணவர் விரோத நட வடிக்கைகளால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பாஜக அரசு பொறுப்பேற்ற ஏழாண்டுகளில் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.
பெண் குழந்தைகளின்  கல்விக்கு எதிராக...

தற்போதைய ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பில் கூட மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவி தொகையை (NSIGSE) நிறுத்தியுள்ளது. அதன் 80% விழுக்காட்டு நிதியை “பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்” எனும்‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற மோடி யின் விளம்பரத் திட்டத்திற்கு திருப்பியுள்ளது. 2015ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தால் என்ன பயன் என்று இன்று வரை மோடி பதில் அளிக்கவில்லை.  மேலும் எம்.பில் (ஆய்வியல் நிறைஞர்) எனும் ஓராண்டு படிப்பு பல மாணவிகள் மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. குடும்ப சூழல், பொருளாதார காரணங்களால் மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு மேல் படித்து முனைவர் பட்டம் பெற இயலாத பல மாணவர்களுக்கு எம்.பில்  சிறந்த படிப்பாக இருந்தது. தேசியக் கல்வி கொள்கை இப்படிப்பினை தேவையற்றது என நீக்கியுள்ளது. பட்டப்படிப்பை நான்காண்டாக மாற்றுவது, மூன்றாம் வகுப்பு முதல் பொதுதேர்வுகள் எனப் பல வடிகட்டும் முறைகளைக் கடைபிடிக்க உள்ளது. மேலும் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 3% விழுக்காடுக்கு மேல் உயர்த்துவோம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாக மட்டுமே உள்ளது. மாறாக கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. 

பட்டியலின மாணவர் எண்ணிக்கை குறைந்தது

கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான முனைவர் வி.சிவதாசன் அவர்கள் சில புள்ளிவிவரங்களை முன்வைத்து ஒன்றிய அரசின் கல்வி விரோத நடவடிக்கைகள் பற்றி கேள்வி  எழுப்பினார். அதில் குறிப்பாக 2016-17 ஆம் ஆண்டு களில் தேசிய அளவில் முனைவர் பட்டத்திற்கான கல்வி உதவி தொகை பெற்றுவந்த பட்டியல் சமூக மாணவர்கள் எண்ணிக்கை 9,503 ஆக இருந்தது; 2020-21ல் 3,986 ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 58% விழுக்காடு மாணவர்கள் எண்ணிக்கையை குறைத் துள்ளது. முனைவர் பட்டத்திற்கு பிறகு படிக்கும் ‘போஸ்ட் டாக்டொரல்’ (முது முனைவர்) படிப்புக்கான உதவித்தொகை பெறுவோரில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி மாணவர் எண்ணிக்கை 2016-17 ஆம் ஆண்டில் 554 பேராக இருந்தது; 2020-21ல் 332 ஆக குறைந்துள்ளது. இதில் மாணவிகள் எண்ணிக்கையும் 2016-17ல் 642 என்ற எண்ணிக்கையிலிருந்து 2020-21ல் 434 ஆக குறைந்துள்ளது. அடிப்படை அறிவிய லுக்கான ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையும் 83% விழுக்காடு குறைந்துள்ளது.  மாணவர்கள் எண்ணிக்கை குறையக் காரணம்... மாணவர்கள் படிக்க வரவில்லை என்பதல்ல;  உதவி பெறுவோர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு திட்ட மிட்டு குறைத்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 

கல்விக்காக அரசு செலவழிப்பது தேவையற்றது; அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும் தனியார் முதலாளிகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சம். இத்தகைய கருத்தை 1998 லேயே பிர்லா-அம்பானி கல்வி கொள்கை தெரிவித்திருந்தது. இன்று அது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி மாணவர் எண்ணிக்கையும் வீழ்ச்சி

உலகளவில் ஆய்வுகளுக்கான மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் ஒரே தேசம் இந்தியா வாகதான் இருக்க முடியும். அதுவும் குறிப்பாக குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் வெளியேற்றுவது மிகப் பெரிய அநீதி. மேலும் நெட், ஜே.ஆர்.எப் போன்ற ஆய்வு மாணவர்களுக்கான தகுதி மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகளை முறையாக நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது. வரு டத்திற்கு இரண்டு முறை நடைபெற்ற தேர்வை இனி ஒரு முறை நடத்தினால் போதும் என்கிறது. ஒரு பேராசிரி யருக்கு வழங்கி வந்த ஆய்வு மாணவர்கள் எண்ணிக் கையை சரிபாதியாக குறைத்துள்ளது. அவ்வாறு குறைக்கப்பட்டால் பேராசிரியர் எண்ணிக்கையை அதி கப்படுத்த வேண்டும் ஆனால் பேராசிரியர் எண் ணிக்கையும் குறைக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்கள் எண்ணிக்கை குறைய இது ஒரு அடிப்படையான காரணமாகும்.  மேலும் அனைத்து மத்திய கல்வி நிலையங்களிலும் பன்மடங்கு கல்வி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இத்தகைய உயர்வுக்கு எதிராக போராடியதற்காக மாணவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனையை அந்நிர்வாகம் வழங்கியது.

முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடும் சிறுபான்மை மாணவர்களுக்கான மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகையை 2016ல் 4,141 என்ற மாணவர் எண்ணிக்கையிலிருந்து சரிபாதியாக குறைத்து 2020ல் 2,348 என்ற எண்ணிக்கையில் வழங்கியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீது சமூகத்தில் பல்வேறு தாக்கு தலை தொடுப்பது மட்டுமின்றி அவர்களின் கல்வியிலும் ஒன்றிய அரசு கைவைத்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் உயர் கல்வி பயில வரும் மாணவிகள் எண் ணிக்கை வெறும் 5% விழுக்காடுதான். மொத்த உயர் கல்வி பயில வரும் மாணவிகள் விழுக்காடு 49%. இந்த நிலையில், அவர்களின் மத பழக்கவழக்கங்களை முன்வைத்து கர்நாடகத்தில் காவி கும்பல் நடத்தும் வன்முறை வெறியாட்டம் இஸ்லாமிய மாணவிகளின் கல்வியை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

ஆர்எஸ்எஸ் வெறியர்களின் இழிசெயல்கள் 

மாணவர்கள் மீது கல்வியில் நடக்கும் இத்தகைய அநீதிகளுக்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரள விடாமல் அவர்களை சாதிய, மதவாத உணர்வுக ளுக்குள் மூழ்கடிக்கும் வேலையை பாஜக செய்து  வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கருத்து களை மாணவர்களிடம் திட்டமிட்டு புகுத்தி வருகிறது. சமீபத்தில் புள்ளி பாய், சுள்ளி டீல் என்ற வலைதள செயலி பெண்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமூ கத்திற்கு எதிராகவும் மிக மோசமான வேலைகள் நடந்து வந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் புகைப்படம், உருவகேலி, தொலைபேசி எண் பகிர்வது போன்ற வேலைகள் அதில் நடைபெற்றது. சில ஆதிக்க சாதி இந்து ஆண்கள் மற்றும் பெண்களும் இவ்வேலைகள் செய்தது தெரியவந்தது. இவர்களின் வயது 17தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மதவாத பிற்போக்கு சிந்தனையை இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி சார்ந்த மாணவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

கல்வியில் ஆர்எஸ்எஸ்சின் வலதுசாரி திரிபு வேலை களை வெளிப்படையாகவும் மிகவும் வேகமாகவும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. குடியரசு தின அணிவகுப்பில் கல்வித்துறை சார்பில், ஒன்றிய பாஜக அரசின் காவிவாத கல்விக்கொள்கையை வெளிப் படுத்தும் ஊர்தியை இடம் பெறச்செய்தது. அதில் மனுவாத குருகுல கல்வியை இந்திய கல்வியாக உலகிற்கு பறைசாற்றும் வேலையை செய்தது. தில்லி  பல்கலைக் கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளா கத்தில் மாணவிகள் விடுதி அருகில் பசுவிற்கான கோசாலையை அக்கல்லூரி நிர்வாகம் அமைத்து வருகிறது. மேலும் அனைத்து கல்வி வளாகத்திலும் கோசாலை அமைக்க வேண்டும் என பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி மனு அளித்துள்ளது. இந்திய மாணவர் சங்கம் இதை  கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது.

ஜேஎன்யுவின் கதி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்தி ஸ்ரீ பண்டிட்,  நாதுராம் கோட்சே புகழை டிவிட்டரில் பதிந்து பின் எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். இவர்தான் விவசாயிகள் போராட்டத்தை ‘காலிஸ்தான் ஜிஹாதிகள்’ என இழிவு படுத்தியவர். மேலும் துணைவேந்தராக நியமித்த தற்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய கடிதத்தில் பல பிழைகள் இருந்ததை ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்களே குறிப்பிட்டு இணையத்தில் கேள்வி எழுப்பியதும், அதை நான் எழுதவில்லை; என் அலு வலக ஊழியர் என மழுப்பியுள்ளார். நமது தேசத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்படியானவர்கள் கையில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த இரண்டாண்டுகளில் பள்ளிப்படிப்பை, கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்தி வேலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. மேலும் படித்து முடித்த மாணவர்கள் வேலை யின்றி மிகப்பெரிய இன்னலுக்கு உள்ளாகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வேலை தேடி மக்கள் சொந்த ஊர், மாநிலங்களை விட்டு இடப்பெயர்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வட மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சுமார் இரண்டு கோடிபேர் தமிழகம், கேரளாவில் இடம்பெயர்ந்துள் ளனர். மோடி அரசின் இத்தகைய செயல்பாடுகள் இந்திய இளைஞர்களிடையே பெறும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியான கொதிப்பை சாதியாகவும், மதமாகவும் மடைமாற்றம் செய்து வன் முறை, மோதலை ஏற்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. இதை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது.

கல்வி, வேலை, சமூக மேம்பாடு மதநல்லிணக்கம் குறித்த முற்போக்கான அரசியலை நோக்கி மாணவர்க ளையும், இளைஞர்களையும் வளர்த்தெடுக்க இந்திய மாணவர் சங்கம் உறுதியேற்றுச் செயல்படுகிறது. 

கட்டுரையாளர் : 
மத்தியக்குழு உறுப்பினர்,
இந்திய மாணவர் சங்கம்.

நன்றி : தீக்கதிர்
#Theekkathir #தீக்கதிர் #SFI #SFItamilnadu

Sunday, January 26, 2020

கல்வி வளாகங்களை காவு வாங்க துடிக்கும் மத்திய அரசு

கல்வி வளாகங்களை காவு வாங்க துடிக்கும் மத்திய அரசு

January 26, 2020

உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் என போற்றப்படும் இந்திய தேசத்தின் தலைநகரில் அமைந்துள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து தில்லியின் மையப்பகுதிக்கு செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. நொய்டாவிலிருந்து வரும் மக்கள் தில்லியை அடைய டி.என்.டி அல்லது அஷர்தம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மதுரா சாலை மற்றும் கலிண்டி கன்ஞ் சாலை எண் 13ஏ போக்குவரத்து மூடப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி மாநகரின் பாதுகாப்பிற்கு அப்படி என்ன தான் ஆனது? சாலைகளும், மெட்ரோ இரயில்களும் கடந்த முப்பது நாட்களுக்கு மேலாக மூடப்பட யார்தான் காரணம்?.
கடந்த டிசம்பர் 6 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்சா அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை (CAB) பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் முன்மொழியப்பட்டு 12ம் தேதி குடியரசுத் தலைவர் உயர்திரு இராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலோடு சட்டமாக (CAA) நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசதிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வரும் இந்து, சீக்கியர், பார்சி, கிருஸ்தவர், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் தவிற மற்றவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதாவது இம்மூன்று நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்களுக்கும், மியான்மரிலிருந்து வந்த ரொஹிங்கியாக்களுக்கும், பூடானிலிருந்து வந்த கிருஸ்தவர்கள் மற்றும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதாக புதிய சட்டத்திருத்தத்தின்படி நேரடியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அஸ்ஸாமில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து குடியமர்ந்த மக்களால் ஏற்பட்ட மாநிலத்தின் உட்பிரச்சனைகளுக்கு தீர்வு கான தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) ஏற்படுத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. அஸ்ஸாம் மாநில பிரச்சனைக்கு தீர்வுகான உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நாடுமுழுவதும் நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை; மக்கள் தொகை பதிவேடாக (NPR) தேசம் முழுவதும் நடத்தப்போவதாக அறிவித்து இதற்காக கூடுதலாக 4 ஆயிரம் கோடி நிதியையும் அறிவித்தது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்கு மட்டுமின்றி தங்களின் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டிக்குமான பிறப்பு சான்று, பிறந்த இடம் தெரிவிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் முறையான சான்றுகளை சமர்பிக்க தவறும்பட்சத்தில் நாடற்றவர்களாக வதை முகாம்களுக்கு (Concentration camp) அனுப்பப்படும் அபாயத்திற்கு தள்ளப்படுள்ளார்கள்.
இந்த கொடுமையான சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அஸ்ஸாம் மாணவர்கள் மக்களோடு களத்திலிறங்கி போராட்டத்தை துவங்கிட அலிகார் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களும் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அமைப்புகளும் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சூழலில் மாணவர்களை ஒடுக்கினால் போராட்டத்தை கட்டுபடுத்தலாம் என்ற மூடத்தனமான நம்பிக்கையில் மாணவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவியது. அஸ்ஸாமில் மாணவர்கள் உள்ளிட்டு நான்கு பேர் பாதுகாப்புபடையின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகிட ஜாமியாவிலும், அலிகாரிலும் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலின்றி கல்வி வளாகங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதலை காவல் துறையினர் தொடுத்தனர். மேலும் கல்வி வளாகத்தின் வெளியிலிருந்து கற்களையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் காவல்துறையினர் எறிந்தது மட்டுமல்லாமல் தில்லி மாநகரின் பேருந்தையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். மேலும் சில ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காவல் துறை வேடம் அணிந்து போராடும் மாணவர்களை கொடூரமாக தாக்குவது என வன்முறையின் உச்சத்திற்கே மத்திய அரசு சென்றது.
போராட்டத்தை முன்னெடுப்பதில் முன்னிலை வகித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை கட்டுபடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பினரின் ரெளடிகுண்டர்களை கொண்டு மாணவர்களை தாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 5ம் தேதி பல்கலைக்கழகத்தின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராகவும் பருவத்தேர்வை தள்ளிவைக்க கோரியும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ் தலைமையில் மாணவர்களும் பங்கேற்றனர். அமைதியாக அறவழியில் நடைபெற்றுவந்த இப்போராட்டத்தில் ஏ.பி.வி.பி அமைப்பினர் மாலை 6 மணியளவில் முகத்தை மறைத்துக் கொண்டு முகமூடிகளுடன் கைகளில் இரும்பு ராடுகள், குண்டாந்தடிகள் உள்ளிட்ட கொலைக்கருவிகளைக் கொண்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கத் துவங்கினர். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இக்கொலைவெறித் தாக்குதலில் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ், பேராசிரியர் சுச்சாரிடா உள்ளிட்ட 39 பேர் கடுமையாக தாக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து டைம் இணைய இதழில் பதிவிடும் ரானா அயூப் அவர்கள் “ஜேஎன்யு வில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் சிறுது நேரத்தில் சில பத்திரிக்கையாளர்களும் நானும் அங்கு சென்றுவிட்டோம். ஒரே இருட்டாக இருந்தது மெயின் கேட் மூடப்பட்டிருந்தது சிறிது நேரத்தில் கேட் திறக்கபட உள்ளிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் காவிநிற துணிகளால் முகத்தை மறைத்துக் கொண்டு ‘பாரத் மாதாகீ ஜே’ போன்ற முழக்கத்துடன் கைகளில் இரும்பு ராடு, கட்டை…. போன்றவற்றுடன் வெளியே வந்தனர். 200க்கும் மேற்பட்ட காவலதுறையினர் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்… வன்முறையாளர்களில் சிலர் உள்ளூரை சார்ந்தவர்கள் என தெரிந்தது அவர்களை அனுகி நான் கேட்ட போது ‘முகாலாயர்களை வளாகத்திலிருந்து சுத்தப்படுத்துவதாக’ கூறினார். மேலும் விடுதிகளில் இருந்த மாணவர்களையும், சில பார்வையற்ற மாணவர்கள் உள்ளிட்டு கடுமையாக தாக்கபட்டிருந்தனர்…. தலையில் பலத்த காயத்துடன் மாணவர் தலைவர் இருந்த ஆம்புலன்சை வெளியே பொவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர் நீண்ட நேர அலக்கழிப்பிற்கு பின் ஒரு வழியாக கடினப்பட்டு பின்புற கேட் வழியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இது குறித்த பல்வேறு வீடியோ ஆதாரங்களை நான் தில்லியின் மிக உயரிய போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் காவல்துறையோ மண்டை உடைந்து ஐந்து தையல்கள் போடபட்டிருந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவரும் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) நிர்வாகியுமான அயிசே கோஸ் மீதே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது… ஆளும் பிஜேபி அரசின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் தான் எங்களை தாக்கினார்கள் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆதரத்துடன் தெளிவாக குறிப்பிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” இது குஜராத் கோப்புகள் என்ற ஆவணத்தை வெளியிட்டு மோடி, அமிஷாவின் வன்முறை, பாலியல் குற்றங்களை வெளி கொணர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரானா அயூப்பின் பதிவுகளின் சிறு பகுதியே. மேலும் இந்தியா டுடே தொலைக்காட்சியில் ஏபிவிபி நிர்வாகி நாங்கள் தான் அடித்தோம் என்று சொன்ன ஆதரங்கள் போன்று எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் தில்லி காவல்துறையும் நீதிமன்றமும் இருக கண்ணை கட்டிக்கொண்டுள்ளது.
ஜாமியா மிலியாவில் 1000 மாணவர்கள் மீது வழக்கு புனைந்துள்ளனர். அலிகாரிலும் பாதிக்கபட்ட மாணவர்களையே சிறையில் அடைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தாக்குதல்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதில் 21 பேர் உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மிகப்பெரும் போராளியாக மோடியின் நடிப்பையே விஞ்சும் மம்தா ஆட்சி நடந்தும் வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கை மூலம் காவி கார்பரேட் அஜண்டாவை அமுல்படுத்த முயற்சிக்கும் சூழ்நிலையில் இக்கொடிய தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தற்போது (24.01.2020) இந்துதுவா பயங்கரவாதிகளின் சோதனைக் கூடமாகவுள்ள குஜராத்தின் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கத்தின் இடது ஜனநாயக சமூக நீதிக்கூட்டணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
வன்முறைகளும் கொலைக்கருவிகளும் கல்வி வளாகத்தின் கட்டிடங்களை, கதவு, ஜன்னல்களை தகர்கலாம், மாணவர்களின் இரத்தங்களை சுவைத்து நுகரலாம் ஆனால் மதச்சார்பற்ற ஜனநாயகபூர்வ கல்விக்கான மாணவர்களின் போராட்ட உணர்வில் சிறுதுரும்பை கூட அவர்களால் அசைக்கமுடியாது என வரலாறு தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

க.நிருபன் சக்கரவர்த்தி
இந்திய மாணவர் சங்கம்

Tuesday, January 7, 2020

ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்

ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என
நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்
By மாற்று ஆசிரியர்குழு January 7, 2020

தமிழில்: க.கனகராஜ்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக தாக்குதல் தொடர்பாக தி இந்து ஆங்கில ஏடு எழுதியுள்ள ‘அராஜகத்தின் முகமூடி’ என்ற தலையங்கம் தமிழில்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதல் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது .

முகமூடி அணிந்த கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது.அதிரவைக்கும் கொடூரமான இத்தாக்குதலின் காட்சிகள் ஒரு கொடும் துயரமாக இந்திய மனச்சாட்சியில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இந்த கும்பல் கல்லூரி விடுதிகளை நொறுக்கியுள்ளது. மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருக்கிறது .
திட்டமிட்ட பைத்தியக்காரத்தனமான இந்த வன்முறை பல மணி நேரங்கள் நடந்திருக்கிறது .

புதுடில்லி காவல்துறை ஒரு குற்றவாளியைக்கூட இதுவரையிலும் கைது செய்யவில்லை . இத்தனைக்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மிக மோசமான
வார்த்தைகளால் முழக்கமிட்டுக் கொண்டு மிக சாவகாசமாக நடந்து போனதை பார்க்கிறபோது காவல்துறை குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பாதுகாப்பு அரணாக நின்றதாகவே தெரிகிறது .

குற்றம் செய்ய தூண்டியவர்கள் குற்றத்தை நடத்தியவர்கள் இவர்களை மிஞ்சுகிற விசுவாசத்தை குற்றவாளிகளிடம் டெல்லி காவல்துறை காண்பித்திருக்கிறது.

ஒரு ஜனநாயக நாடாக முழுமை பெறுவது மற்றும் அதனுடைய நிறுவனங்களைப் பொக்கிஷங்களாக போற்றுவது என்கிற இந்தியாவின் கனவில் இந்த இரவு ஒரு கொடும் நிகழவாக ஆட்டுவிக்கும்.

அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள் தான். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு பின்னே யார் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமல்ல. இது இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனம்.இந்த நிறுவனத்தில் கற்பதற்கு வாரிசுவழியோ அல்லது பணமூட்டைகளோ தேவையில்லை.

பொதுவாகவே ஹிந்துத்துவா வாதிகள் அறிவு வாதத்தையும. குறிப்பாக அறிவுத்துறை அமைப்புகளையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அவர்களால் பிரதான தாக்குதலுக்கு இலக்கான தாகவே இருந்திருக்கிறது. இப்போது நடந்திருப்பதும் அதையே உறுதிப்படுத்துகிறது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் வேறுபட்ட தன்மைகள் உடைய மாணவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறது. அந்த மாணவர்களுக்கு விமர்சன பூர்வமான சிந்தனை முறையையும் அதேபோன்று அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் சிறப்பாக விளங்குவதற்கும் மிகச்சிறந்த வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்வி கேட்பதற்கான உரிமை இரண்டையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த இரண்டின் மீதும் அளவிடற்கரிய வெறுப்பும் கோபமும் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு இருந்து கொண்டே இருந்திருக்கிறது.

இப்போதைய ஆட்சியாளர்கள் புரட்டுக்கும் வரலாற்றுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள். நம்பிக்கைக்கும் வெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .அதேபோன்று விமர்சனத்துக்கும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .

மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று நம்பினால் ஒழிய அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் என்கிற ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பு தான் இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டு நம்பகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.

இந்த முகமூடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்கிற பட்டியல் மிக நீளமானது . அவர்களில் சிலரது முகங்களை நீங்கள் நினைவு படுத்த முடியும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தங்களுடைய கடமையில் தவறிவிட்டார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது . அவர்கள் ஆசிரியர் என்ற முறையிலும் பாதுகாவலர் என்ற முறையிலும் தவறு செய்திருக்கிறார்கள்;என்பதோடு தாங்கள் வகிக்கிற பொறுப்பின் புனிதத்தை சீரழித்து விட்டார்கள்.

தற்போது டெல்லி காவல்துறை கமிஷனராக இருக்கக்கூடிய அமுல்யா பட்நாயக், அவரின் கீழ் உள்ள காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நூலகத்திற்குள் உள்ளே புகுந்து சட்டம் ஒழுங்கை எல்லாம் பாதுகாத்த கதை நமக்குத் தெரியும். ஆனால் இங்கு அவர்கள் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. உண்மையில் முகமூடி அணிந்து தாக்கியவர்களின் கூட்டாளியாக இருந்தார்கள் என்பதே உண்மை.

அவர்கள் முகமூடி அணிந்து இருக்கவில்லை ஆனால் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்துக் கொண்டனர். தங்கள் பெயர் பொறித்த இலச்சணைகளை (name batch) அணிவிக்காமல் விட்டதன் மூலம் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்திருந்தார்கள்.

டெல்லி நிர்வாகம் தங்களுக்கு எந்த பொறுப்பும் இந்தப் பிரச்சினையில் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலரும் மிக மேலோட்டமாக சொல்லுகிற எதிர்ப்புகள் எந்தவித நம்பிக்கை தன்மையும் இல்லாதது.

மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் அவமானகரமான இந்த செயல் தங்களது ஒப்புதலோடு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்; முகமூடி அணிந்து கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து நீதியை நிலை நிறுத்தவேண்டும்.

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...