Showing posts with label corona. Show all posts
Showing posts with label corona. Show all posts

Tuesday, May 19, 2020

மதிகெட்ட அதிபரால் தத்தளிக்கும் பிரேசில்

இந்தியாவின் குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினாராக வந்த மோடியின் மறுவார்ப்பு பிரேசில் அதிபர் போல்சனரோவின் பைத்தியக்கார நடவடிக்கைகளால் அந்நாடு மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 

கொரோனா மரணத்தால் சவக்குழிகள் ஓய்வின்றி தோண்டப்படும் சூழல் பிரேசிலில் நிலவுகிறது. 

சமூக விலகலைவிட பொருளாதார புழக்கமே அவசியம் என பேசிய டிரம்பின் திணவெடுத்த ஏகாதிபத்திய வாய்கொழுப்பை அப்படியே பிரதிபலித்த பிரேசில் அதிபர் போல்சனரோ இன்றும் தன் நிலைபாடை திரும்ப பெறாமல் இறுமாப்புடன் தெருவெங்கும் செல்பி எடுத்து அழைகிறார்.

தன் கட்சியின் சொந்த தலைவர்களே போல்சனரோவை விமர்சித்து பதவிகளை ராஜினாமா செய்துவரும் நிலையில். 

நம்மவரை போலவே இவரும் வெறும் வாயில் அறிவிப்புகளால் வடைசுட்டு வருகிறார்.
மேலும் உலகின்நுறையீரல் அமேசானை கொளுத்தியதோடு நில்லாமல் தற்போது அதன் தூய்மையான ஜீவாதார மனித உயிர்களுக்கும் நோய்தொற்று ஏற்பட காரணமாகியுள்ளார்.
#bolsonaro #brazil #COVID19 #corona #pandamic

Tuesday, April 7, 2020

சோசலிசமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று

இது ஒரு அற்புதமான காட்சி வியாட்நாமில் லாக்டவுன் அறிவித்துள்ள நிலையில் சாதாரண ஏழைமக்கள் பயன்படுத்தும் வகையில் அரிசிக்கான 24மணிநேர ATM வைத்துள்ளது. இதில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் இரண்டு கிழோ அரிசிவரை வரும். ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

 "உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் உங்களை போன்ற மற்றவருக்கும் கொஞ்சம் தாருங்கள்" என்பதை போன்ற வாசகம் இதன் முழக்கமாக வைத்துள்ளனர். யாரும் தேவைக்கு மேல் எடுத்ததில்லை என்பது கூடுதல் சிறப்பு.


அந்த நாட்டின் அனைத்து அரிசி ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டின் 1,90,000 டன் அரிசி மக்களுக்கானதாக அறிவித்துள்ளது... 


ஜூன் இறுதிவரை முழு லாக்டவுன்அறிவித்துள்ள நிலையில் உணவு பொருள், மருந்து கையிருப்பு, மருத்துவமனை, இணையவழி பாடம் அனைத்தும் வியாட்நாமில் உறுதி செய்யபட்டுள்ளது..  


வியாட்நாம் சோசலிசத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சோசலிச குடியரசு நாடாகும்..


#SocialismistheFuture #socialism #covid_19 #pandamic

Monday, March 30, 2020

ஒரு முறை கண்திறந்து பாருங்கள் பாரத பிரதமரே

ஒரு முறை கண்திறந்து பாருங்கள் பாரத பிரதமரே இவர்கள் செய்த தவறென்ன. கொரோணா வைரஸை ஒழிக்க இவர்கள் கைகளையும் தட்டுவார்கள், மணியும் அடிப்பார்கள். தங்கள் சொந்த காசை வங்கியில் எடுக்க முடியாமல் கால்கடுக்க நின்று அந்த வங்கியின் அருகிலேயே மாண்டும் கிடப்பார்கள். 

கழிவறையின் கனநேரச் சிந்தனையில் உதிக்கும் உங்களின் பல யோசனைகளுக்கு உங்களை சுற்றியுள்ள பின்னணி இசைஞர்கள் போல அரசியல் மரமண்டைகள் ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் சொல்லலாம். 

நீங்களும் வருத்த முந்திரியும் திராட்சையும் சாப்பிட்டுவிட்டு இரவு எட்டு மணிக்கு உங்கள் யோசனையை அறிவித்து நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அமல்படுத்தலாம். ஆனால்

இவர்களை பற்றி ஒரு சில விநாடிகளாவது சிந்தியுங்கள். இராமாயணம் பார்த்து பொழுதை கழிக்க இவர்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் எம்பிக்கள் அல்ல. 

பசியுடன் இரத்தம் வழியும் கால்களுடன் 1000 கி.மீகளை நடந்தே கடக்கும் இவர்களுக்கா ஒரு சிறு அவகாசம் வழங்கியிருக்கலாமே உயர்திரு 56 இஞ்ச் மோடி அவர்களே.

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...