இந்தியாவின் குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினாராக வந்த மோடியின் மறுவார்ப்பு பிரேசில் அதிபர் போல்சனரோவின் பைத்தியக்கார நடவடிக்கைகளால் அந்நாடு மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
கொரோனா மரணத்தால் சவக்குழிகள் ஓய்வின்றி தோண்டப்படும் சூழல் பிரேசிலில் நிலவுகிறது.
சமூக விலகலைவிட பொருளாதார புழக்கமே அவசியம் என பேசிய டிரம்பின் திணவெடுத்த ஏகாதிபத்திய வாய்கொழுப்பை அப்படியே பிரதிபலித்த பிரேசில் அதிபர் போல்சனரோ இன்றும் தன் நிலைபாடை திரும்ப பெறாமல் இறுமாப்புடன் தெருவெங்கும் செல்பி எடுத்து அழைகிறார்.
தன் கட்சியின் சொந்த தலைவர்களே போல்சனரோவை விமர்சித்து பதவிகளை ராஜினாமா செய்துவரும் நிலையில்.
நம்மவரை போலவே இவரும் வெறும் வாயில் அறிவிப்புகளால் வடைசுட்டு வருகிறார்.
மேலும் உலகின்நுறையீரல் அமேசானை கொளுத்தியதோடு நில்லாமல் தற்போது அதன் தூய்மையான ஜீவாதார மனித உயிர்களுக்கும் நோய்தொற்று ஏற்பட காரணமாகியுள்ளார்.
#bolsonaro #brazil #COVID19 #corona #pandamic