Friday, March 8, 2019

கஜா புயலின் கோர தாண்டவம், அரசின் அலட்சியம்

இழப்பதற்கு எதுவுமில்லை
அத்தனையும் இழந்தாகிவிட்டது!!
29.11.2019
 ஆலமரங்களின் ஆணிவேர் மட்டுமல்ல , ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும்  பிடுங்கி எறிந்து இருக்கிறது கஜாபுயல்.

 நாகை மாவட்டம். விழுந்தமாவடியில், மரங்கள் மட்டும் அல்ல, மனங்களும் வீழ்ந்து கிடக்கிறது.
 குருத்து இல்லாத தென்னம்பிள்ளை, கொத்தும்  கொலையும்மாய், தலைகுப்புற மாமரம், சிதறிக்கிடக்கும் காய்கனிகள்,  நிறம் மாறிப்போன கருநிறத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் இதன் நடுவே கூரையில்லா வீடுகளாய் கடும் துன்பத்தில் மக்கள்.


பார்க்கும்போதே மனம்  பதைபதைக்கிறது,  துன்பம் தொற்றிக்கொள்கிறது.
சில முற்போக்கு அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், சமூக செயல்பாட்டாளர்களும் உதவி செய்திருக்கிறார்களே தவிர, அரசாங்கத்தின் உதவி என்பது இதுவரை கிடைத்த பாடில்லை.


தற்போது அம்மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக வீழ்ந்து கிடக்கும் மரங்களை யாராவது வெட்டி எடுத்துச் செல்ல மாட்டார்களா என்பதே முதன்மையாக உள்ளது. மரங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம் வெட்டி எடுத்து இடத்தை சுத்தம் செய்து கொடுத்தால் போதும் என்கின்றனர்.
யாராவது உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
-க.நிருபன்
8695969787.
https://m.facebook.com/story.php?story_fbid=1879235712222962&id=100004096548014  

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...